எங்க சோத்தை தின்னுட்டு.. எங்கிட்டேயாவா? ஒழிச்சுடுவேன்... பாஜகவினரை நேரில் எச்சரித்த மமதா!
கொல்கத்தா: தமது வாகனத்தை சூழ்ந்து கொண்டு ஆத்திரமூட்டும் வகையில் ஜெய் ஶ்ரீராம் கோஷங்களை எழுப்பிய வெளிமாநில பாஜகவினரை காரில் இறங்கி 'ஒழித்து கட்டிவிடுவேன்' என பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியை ஆத்திரமூட்டும் செயல்களை தொடர்ந்து பாஜகவினர் செய்து வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து குடியேறியவர்களை வைத்து இந்த முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன என்பது மமதா பானர்ஜியின் புகார்.

இப்படி செய்வதன் மூலம் வங்காளிகளுக்கும் வெளிமாநிலத்தவருக்கும் இடையே மோதலை உருவாக்க பாஜக சதி செய்கிறது என்பதும் அவரின் குற்றச்சாட்டு. இந்நிலையில் பாரக்பூர் பகுதியில் 2 இடங்களில் மமதா பானர்ஜியின் காரை சூழ்ந்து கொண்டு ஜெய் ஶ்ரீராம் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனால் ஆத்திரமடைந்த மமதா பானர்ஜி காரில் இறங்கி அங்கே இருந்த கூட்டத்தினரிடம் ஆவேசமாக கூறியதாவது:
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.. மேற்கு வங்கத்தை இன்னொரு குஜராத் ஆக மாற்ற முயற்சிக்காதீங்க.. வங்காளிகளுக்கும் பிற மாநிலத்தவருக்கும் இடையே மோதல் உருவாவதை நான் அனுமதிக்க முடியாது.
வெளிமாநிலத்தவர், மேற்கு வங்கத்தை தாய்வீடாக கருதுகிறார்கள். அவர்களை மதிக்கிறேன். உங்களது சுயமரியாதையை பாஜகவிடம் அடகு வைக்க வேண்டாம். பாஜக போன்ற கிரிமினல்களை எதிர்த்து இணைந்து போராட வேண்டும். இவ்வாறு மமதா கூறினார்.
இதனைத் தொடர்ந்து காரில் மமதா பானர்ஜி ஏறி அமர்ந்தவுடன் மீண்டும் ஜெய் ஶ்ரீராம் கோஷங்களும் மோடி! மோடி! என்கிற முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இதனால் காரைவிட்டு இறங்கிய மமதா, இந்த மாதிரி ரவுடித்தனத்தை பொறுத்துகிட்டு இருக்க முடியாது.
உங்களுக்கு சோறு போடுறோம்.. துணிமணி கொடுக்கிறோம். இதை எல்லாம் அனுமதிக்க முடியாது. நீங்க உயிர் வாழ்வதே எங்களால்தான்... என கொந்தளித்தார்.
இதேபோல் மற்றொரு இடத்தில் மமதா காரை சூழ்ந்து கொண்டு முழக்கங்கள் எழுப்ப ஆத்திரத்தின் உச்சத்துக்கு போன மமதா, காரைவிட்டு இறங்கி.. இப்ப இங்க வந்து என் முன்னாடி கோஷம் போடுங்க.. தைரியம் இருந்தா இப்ப வந்து கோஷம் போடுங்க.. கிரிமினல்கள்.. ரவுடிகள்.. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.. என கடுமையாக வார்னிங் செய்தார் மமதா. மேலும் முழக்கமிட்டவர்கள் யார் என்பதை கண்டு நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு மமதா பானர்ஜி உத்தரவிட்டார்.
மமதா பானர்ஜியை ஆத்திரமூட்டுவதற்காகவே இத்தகைய முழக்கங்கள் எழுப்பப்பட்டாலும் திரிணாமுல் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மமதா செல்லும் இடங்களில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
-
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
மம்தாவை கைவிடும் இஸ்லாமியர்கள்.. ஆட்டத்தை கலைத்து போடும் ஓவைசி? மேற்கு வங்கத்தில் களநிலவரம் என்ன!











Click it and Unblock the Notifications