கலவரக்காரர்களை உடையை வைத்தே கண்டறியலாமா?.. அப்ப மோடிஜி என் உடையை வைத்து நான்யாருனு சொல்லுங்க.. மம்தா
Recommended Video
கொல்கத்தா: தவறு செய்பவர்களை அவர்களது உடைகளை வைத்து வேறுப்படுத்தி பார்க்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல், பேரணி என நாடே கொந்தளித்து வருகிறது. அந்த வகையில் கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நேற்று முன் தினம் பேரணியை தொடங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றார். அந்த வகையில் நேற்றும் அவர் பேரணியை தொடர்ந்தார்.

உடையை கண்டு அடையாளம்
அப்போது அவர் பேசுகையில், தலையில் அணிந்திருக்கும் தொப்பியை வைத்து பாஜகவினர் மக்களை வேறுப்படுத்தி பார்க்கின்றனர். ஆனால் போராட்டம் நடத்துபவர்களை மட்டும் அவர்கள் அணிந்திருக்கும் உடையை கொண்டே அடையாளம் கண்டு கொள்கின்றனர்.

மோடியால் சொல்ல முடியுமா
இந்த நாடு மோசமான கட்டத்தை நோக்கி செல்கிறது. நான் அணிந்திருக்கும் உடையை வைத்து நான் யார் என்பதை பிரதமர் மோடியால் சொல்ல முடியுமா? என்ன நடக்கிறது இந்த நாட்டில்?

சொந்த நலன்
பாஜகவினர் தங்கள் சொந்த நலனுக்காக எல்லாவற்றையும் செய்கின்றனர். அவர்கள் பிரிவினை மற்றும் அருவருக்கத்தக்க அரசியலில் ஈடுபடுகின்றனர். அஸ்ஸாமில் நடந்து கொண்டிருப்பதை பாருங்கள். திரிபுராவில் நடந்து கொண்டிருப்பதை பாருங்கள்.

இந்தியர்கள்
வருங்காலங்களில் பாஜக ஆளும் மாநிலங்களிலும் கூட இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பும். அவர்களை பொருத்தமட்டில் நாம் இந்தியர்கள் அல்ல. அவர்களை பொருத்தமட்டில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் இந்தியர்கள் அல்ல. பாஜக தலைவர்கள், பாஜக தொண்டர்கள், பாஜக ஆதரவாளர்கள் மட்டுமே இந்தியர்கள்.

சட்டம்
மேற்கு வங்கத்தில் 30-க்கும் மேற்பட்டவர்கள் தேசிய குடிமக்கள் பதிவுக்காக தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் இறப்பிற்கு யார் பொறுப்பேற்பது? மக்கள் அனைவரும் போராட வேண்டும். ஆனால் சட்டத்தை ஒரு போதும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார். ஜார்க்கண்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கலவரக்காரர்களை உடையை வைத்தே கண்டறியலாம் என தெரிவித்திருந்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications