இரட்டை இலையை பெற லஞ்சம்: தினகரனின் புரோக்கர் சுகேஷின் கூட்டாளியும் சிக்கினார்!
இரட்டை இலையைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி : தினகரனுக்காக இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவின் காரணமாக அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்துவருகிறது. இதில் சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார்.

தினகரனின் கூட்டாளிகள் மல்லி உள்ளிட்டோரும் சிக்கினர். தினகரனுக்கு புரோக்கராக செயல்பட்ட சுகேஷ் சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில் சுகேஷின் கூட்டணி புலிக் டெல்லி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.











Click it and Unblock the Notifications