மாமனார் கொடுமையால் மருமகன் தற்கொலை- ஹரியானாவில் பரிதாபம்
பரிதாபாத்: ஹரியானா மாநிலத்திற்கு உட்பட்ட பரிதாபாத்தில் மாமனார் கொடுமை தாங்க முடியாமல் மருமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 ஆம் தேதியன்று மருமகன் அமீர் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். இவர் தற்கொலை செய்வதற்கு முன்பு அதற்கான காரணத்தை கடிதத்தில் எழுதிவைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், தனது மாமனார் தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னையும், தனது குடும்பத்தாரையும், அவரும், அவரது 4 சகோதரர்களும் கொன்று விடுவார்கள் என்று பயந்தே தான் இந்த முடிவை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து, அமீரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications