For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொய் சொன்ன மகனை தூக்கி போட்டு மிதித்த கொடூர தந்தை... ரசித்தபடி வீடியோ எடுத்த தாய்!

பொய் கூறியதற்காக சிறுவனை தூக்கி போட்டு மிதிக்கும் தந்தையின் செயலை கண்டு கொள்ளாமல் ரசித்தபடியே அவனது தாய் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சிறுவனை அவனது தந்தை தூக்கி போட்டு மிதிக்கும் காட்சி-வீடியோ

    பெங்களூரு: பொய் கூறியதற்காக சிறுவனை அவனது தந்தை தூக்கி போட்டு மிதிக்கும் காட்சிகள் 3 மாதங்கள் கழித்து தற்போது வெளியே வந்துள்ளது. இதையடுத்து அந்த தந்தை கைது செய்யப்பட்டார்.

    பெங்களூருவில் கெங்கேரி குளோபல் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (37). இவரது மனைவி ஷில்பா. இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். மகேந்திரனின் செல்போன் பழுதடைந்து விட்டதால் கடையில் கொடுக்கப்பட்டது.

    அந்த போன் சரியாக வேலை செய்கிறதா என்று பார்ப்பதற்காக கடைக்காரர் அதில் உள்ள ஒரு வீடியோவை ப்ளே செய்து பார்த்துள்ளார். அதை பார்த்தவருக்கு தூக்கி வாரி போட்டது.

    சார்ஜர் மூலம் தாக்குதல்

    சார்ஜர் மூலம் தாக்குதல்

    அந்த வீடியோவில் செல்போன் பழுது பார்க்க கொடுத்த மகேந்திரன் தனது 10 வயது சிறுவன் பொய் கூறியதற்காக முதலில் மொபைல் சார்ஜர் மூலம் தாக்கினார். பின்னர் பெல்ட்டாலும் கொடூரமாக தாக்குதல் நடத்துகிறார்.

    மல்யுத்த போட்டி

    மல்யுத்த போட்டி

    இதையடுத்து பொய் சொல்லுவியா பொய் சொல்லுவியா என கேட்டு அந்த பிஞ்சு சிறுவனை கண்டபடி தூக்கி கட்டிலில் போடுகிறார். இதை பார்ப்பதற்கு மல்யுத்த போட்டியில் சக வீரரை தூக்கி போட்டு அடிக்கும் காட்சி போல் உள்ளது.

    விடாமல் தாக்குதல்

    விடாமல் தாக்குதல்

    அந்த சிறுவன் இனிமேல் பொய் கூறமாட்டேன் பொய் கூற மாட்டேன் என்று கதறி கொண்டே கூறியும் விடாமல் இழுத்து போட்டு மிதிக்கிறார் மகேந்திரன். இந்த செயலை தடுக்காமல் பொய் சொல்கிறான் பொய் சொல்கிறான் என்று மகேந்திரனின் கோபத்தை ஏற்றிவிட்டு வீடியோ எடுத்தது தாய் ஷில்பா.

    தந்தை கைது

    தந்தை கைது

    இதை பார்த்த கடைக்காரர் நேராக காவல் நிலையத்தில் கொண்டு சென்று கொடுத்துவிட்டார். இதையடுத்து மகேந்திரனை போலீஸார் கைது செய்தனர். தாய் ஷில்பா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுமார் 3 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த வீடியோ செல்போன் பழுதானதால் வெளியே வந்தது.

    English summary
    A 37-year-old man from Bengaluru has been arrested after a disturbing video of him mercilessly thrashing his 10-year-old son went viral on social media. The incident has been reported in Bengaluru.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X