மங்களூரில் முஸ்லிம் வாலிபர் தாக்கப்பட்ட வழக்கில் திருப்பம்.. பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்!
மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில் இந்து பெண்ணுடன் இஸ்லாமிய வாலிபர் பேசிக்கொண்டிருந்ததற்காக அந்த வாலிபரை இந்து ஆண்கள் சேர்ந்து அடித்து கம்பத்தில் கட்டி வைத்ததாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி பொய் என்று கூறியுள்ள பாதிக்கப்பட்ட பெண், சூப்பர் மார்க்கெட்டில் தன்னுடன் வேலை பார்க்கும் அந்த வாலிபர் தன்னை பலாத்காரம் செய்வதற்காக காரில் கடத்த முற்பட்டபோது பொதுமக்கள் தடுத்து தன்னை காப்பாற்றியதாக போலீசில் தெரிவித்துள்ளார்.

மங்களூரை சேர்ந்த ஷகிர் என்ற 28 வயது வாலிபர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட செய்தி சமூக வலைத்தளங்களிலும், பல ஊடகங்களிலும் வெளியானது. இந்து பெண் ஒருவருடன் தெருவில் பேசியதற்காக அவர் அடிக்கப்பட்டார் என்றும் பரபரப்பாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் இரு தினங்களுக்கு முன்பு உள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. புகாரில் அவர் கூறியுள்ளதாவது: நானும், ஷகிரும், ஒரே சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறோம்.
ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் கிடைத்த பழக்கத்தை தவறாக பயன்படுத்தி, கடந்த பல மாதங்களாக, எனது செல்போனுக்கு மோசமான எஸ்எம்எஸ்களை ஷகிர் அனுப்பி வந்தார். இரு முறை என்னிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். நான் தப்பிவிட்டேன். சம்பவத்தன்று தனது காரை கொண்டு வந்து நிறுத்தி, என்னை உள்ளே பிடித்து தள்ளி கடத்திச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார்.
நான் கூச்சல் போட்டதை கேட்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்து, ஷகிரை கட்டி வைத்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஷகிர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தனது புகாரில் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். மேலும் தனது செல்போனுக்கு ஷகிர் அனுப்பிய எஸ்எம்எஸ்களையும் போலீசாரிடம் ஆதாரமாக காண்பித்துள்ளார் அந்த பெண். இந்த புகாரை தொடர்ந்து, மதரீதியாக உருவான இப்பிரச்சினை, தற்போது அடங்கியுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications