மங்கள்யானை பின்தொடரும் 2 லட்சம் ஃபேஸ்புக் ஆர்வலர்கள்!
டெல்லி: டெல்லி: மங்கள்யான் விண்கலத்தை ஃபேஸ் புக் சமூக வலைதளம் (https://www.facebook.com/pages/ISROs-Mars-Orbiter-Mission/1384015488503058) மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து தகவல்களை ஆர்வத்துடன் அறிந்து வருகின்றனர்.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக, பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் கடந்த 5 ஆம் தேதி மதியம் 2.38 மணிக்கு அனுப்பப்பட்டது. விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இதன்பிறகு, அதன் செயல்பாடு, சுற்றுப்பாதை, பாதையின் தூரம் அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக ஃபேஸ் புக் சமூக இணைய தள பக்கத்தை அக்டோபர் 22ஆம் தேதி இஸ்ரோ தொடங்கியது.
இந்தப் பக்கத்தை நேற்று வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 173 பேர் தொடர்ந்து தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரத்து 704 பேர் இந்தத் திட்டம் தொடர்பாக தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதோடு, இந்தப் பக்கத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்து வருகின்றனர். ஒரு சில கேள்விகளுக்கு இஸ்ரோவும் உரிய பதில்களை வழங்கி வருகிறது. இரண்டே வாரத்தில் இந்த சமூக வலைதளப் பக்கத்துக்கு கிடைத்த வரவேற்பு இஸ்ரோ அதிகாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications