சோனியா பிரதமர் பதவியை ஏற்காததற்கு ராகுல்தான் காரணம்: சொல்வது மணிசங்கர் அய்யர்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்காததற்கு அவரது மகன் ராகுல்தான் காரணம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரான மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.
தமது சுயசரிதை புத்தகத்தின் மூலம் காங்கிரஸ் கட்சி குறித்து ஏராளமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங். அதில் இந்திரா மற்றும் ராஜிவ் போல சோனியாவும் பிரதமர் பதவி ஏற்றால் படுகொலை செய்யப்படுவார் என்று ராகுல் காந்தி அச்சப்பட்டார். அதனால்தான் சோனியா பிரதமராக பதவி ஏற்கவில்லை என்றும் நட்வர்சிங் கூறியிருக்கிறார்.
தற்போது இந்த கருத்தை மூத்த காங்கிரஸ் தலைவரான மணிசங்கர் அய்யரும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த மணிசங்கர் அய்யர் கூறியுள்ளதாவது:

கட்சி நலன் கருதி..
ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் காங்கிரஸின் நலனில் சோனியா அக்கறை காட்டியதில் தவறு எதுவும் இல்லை. காங்கிரஸ் பாரம்பரியத்தைக் காப்பாற்றவும் கட்சியின் எதிர்கால நலன் கருதியும் அவர் அரசியலில் இறங்கினார்.

சர்வாதிகாரி அல்ல..
நட்வர்சிங் சொல்வதைப் போல சோனியா ஒன்றும் சர்வாதிகாரி அல்ல. அதே நேரத்தில் ராஜிவ் படுகொலையின் போது சங்கர் தயாள் சர்மாவைத்தான் சோனியா பிரதமராக்க நினைத்தார் என்பது உண்மைதான். அது காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ராகுலின் அச்சம்..
2004-ல் சோனியா பிரதமர் பதவி ஏற்பதை ராகுல் காந்தி விரும்பவில்லை. சோனியா பிரதமரானால் அவரும் படுகொலை செய்யப்படலாம் என்று ராகுல் அச்சப்பட்டார். அதே நேரத்தில் சோனியா பிரதமர் பதவியை ஏற்காமல் போனதற்கு வேறுச் சில காரணங்களும் இருந்தன. அதை நட்வர்சிங் அறிந்திருக்கவில்லை. நட்வர்சிங் தமது நினைவில் இருந்தவற்றை எழுதியிருக்கிறார். இதில் பாதிதான் உண்மை. முழுமையும் உண்மை அல்ல.

தவறு ஏதும் இல்லை.
தன்னுடைய தாயாரின் பாதுகாப்பு பற்றி ராகுல் காந்தி கவலைப்பட்டதில் என்ன தவறு இருக்க முடியும்?
இவ்வாறு மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications