உன்னை உதைப்பேன்.. பத்திரிகையாளரை பகிரங்கமாக மிரட்டிய மணிசங்கர் அய்யர்

Subscribe to Oneindia Tamil

சிம்லா: தம்மிடம் சரமாரியாக கேள்விகளைக் கேட்ட பத்திரிகையாளரை உதைப்பேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் மிரட்டியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

2017-ம் ஆண்டு பிரதமர் மோடியை 'நீச் ஆத்மி' (இழிபிறவி) என விமர்சித்ததால் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் மணிசங்கர் அய்யர். பின்னர் அவர் மன்னிப்புக் கேட்டார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரங்களை வைத்து பார்க்கும் போது தாம் நீச் ஆத்மி என அவரை குறிப்பிட்டது எவ்வளவு சரியாக இருக்கிறது என பெருமிதப்பட்டார். இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Mani Shankar Aiyar threatens journalist

இதனிடையே சிம்லாவில் செய்தியாளர்களை நேற்று மணிசங்கர் அய்யர் சந்தித்தார். அப்போது அவரது நீச் ஆத்மி கட்டுரை குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் கொதிப்படைந்த மணிசங்கர் அய்யர், பத்திரிகையாளரை பார்த்து உதைப்பேன் என மிரட்டினார். மேலும் பிரதமர் மோடியை ஒரு கோழை என காட்டமாக விமர்சித்தார்.

தொடர்ந்தும் தம்மிடம் கேள்வி கேட்க முயன்ற பத்திரிகையாளர்களை, என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் எனவும் எச்சரித்தார். மணிசங்கர் அய்யரின் இந்த நடவடிக்கை சர்ச்சையாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+