மணிப்பூர்- ராணுவ உடையில் தாக்குதல்கள்- ஓயாத வன்முறை- இணைய சேவைகள் துண்டிப்பு ஜூன் 15 வரை நீட்டிப்பு!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ உடையில் தீவிரவாதிகள் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்துவதாக ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில் ஜூன் 15 வரை இணைய சேவைகள் துண்டிக்கப்படுவதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவினருக்கு எதிராக குக்கி இனமக்கள் தீவிர தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். மைத்தேயி இனமக்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கவே கூடாது என்பதற்கான போராட்டம்தான் பெரும் வன்முறையாக வெடித்தது.

தற்போது குக்கி இனக்குழுவினர் ஆயுதங்களை கைகளில் ஏந்தி உள்ளனர். போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் ஆயுதங்களைப் பறித்து இத்தாக்குதல்களை குக்கி இனக்குழுவினர் நடத்துகின்றனர்.
மணிப்பூரில் கிராமங்களுக்குள் சோதனை என்ற பெயரில் ராணுவ உடையில் குக்கிகள் உள்ளே நுழைகின்றனர். மைத்தேயி இனக்குழுவினரை அடையாளம் கண்டு சுட்டுக் கொல்கின்றனர். இதனால் மணிப்பூரில் வன்முரைகள் ஓயாமல் நீடித்து கொண்டே இருக்கிறது.
மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் மணிப்பூர் மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில், மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவில் முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பல்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.

சுமுகமான உரையாடல், முரண்படும் கட்சிகள்/குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைகள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே சமாதானத்தை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்குவதே குழுவின் பணியாகும். சமூக ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிதல் மற்றும் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே சுமுகமான தொடர்பை இக்குழு எளிதாக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது.
இதனிடையே மணிப்பூரில் வன்முறைகள் ஓயாத நிலையில் அம்மாநிலத்தில் வரும் 15-ந் தேதி வரை இணைய சேவை இணைப்புகள் துண்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications