மணிப்பூர்- ராணுவ உடையில் தாக்குதல்கள்- ஓயாத வன்முறை- இணைய சேவைகள் துண்டிப்பு ஜூன் 15 வரை நீட்டிப்பு!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ உடையில் தீவிரவாதிகள் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்துவதாக ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில் ஜூன் 15 வரை இணைய சேவைகள் துண்டிக்கப்படுவதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவினருக்கு எதிராக குக்கி இனமக்கள் தீவிர தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். மைத்தேயி இனமக்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கவே கூடாது என்பதற்கான போராட்டம்தான் பெரும் வன்முறையாக வெடித்தது.

தற்போது குக்கி இனக்குழுவினர் ஆயுதங்களை கைகளில் ஏந்தி உள்ளனர். போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் ஆயுதங்களைப் பறித்து இத்தாக்குதல்களை குக்கி இனக்குழுவினர் நடத்துகின்றனர்.
மணிப்பூரில் கிராமங்களுக்குள் சோதனை என்ற பெயரில் ராணுவ உடையில் குக்கிகள் உள்ளே நுழைகின்றனர். மைத்தேயி இனக்குழுவினரை அடையாளம் கண்டு சுட்டுக் கொல்கின்றனர். இதனால் மணிப்பூரில் வன்முரைகள் ஓயாமல் நீடித்து கொண்டே இருக்கிறது.
மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் மணிப்பூர் மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில், மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவில் முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பல்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.

சுமுகமான உரையாடல், முரண்படும் கட்சிகள்/குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைகள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே சமாதானத்தை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்குவதே குழுவின் பணியாகும். சமூக ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிதல் மற்றும் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே சுமுகமான தொடர்பை இக்குழு எளிதாக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது.
இதனிடையே மணிப்பூரில் வன்முறைகள் ஓயாத நிலையில் அம்மாநிலத்தில் வரும் 15-ந் தேதி வரை இணைய சேவை இணைப்புகள் துண்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications