Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 முறை மிஸ்ஸிங்.. நிர்வாண ஊர்வலத்தை மறைக்க முயன்ற மணிப்பூர் அதிகாரிகள்? தேசிய மகளிர் ஆணையம் பகீர்

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 3 மாதத்தில் 3 முறை தேசிய மகளிர் ஆணையம் தொடர்பு கொண்டும் மணிப்பூர் மாநில நிர்வாகம் பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்துள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.

மணிப்பூரில் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். மைத்தேயி மக்கள் தங்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க கூறி வருகின்றனர். இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த மே மாதம் 3ம் தேதி இருதரப்புக்கும் இடையே மோதல் உருவாகி வன்முறை வெடித்தது.

Manipur Naked Video: Manipur authorities didnt respond to complaints after reached Out thrice, says NCW

இதனால் மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் நேற்று அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியானது. அதாவது மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளுடன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த 2 பழங்குடியின பெண்களை மைத்தேயி மக்கள் தான் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய, மாநிலத்தை ஆளும் பாஜக அரசுகளை எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல அமைப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் மணிப்பூர் பிரச்சனை பற்றி விவாதிக்க இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில் அது ஏற்கப்படவில்லை. இதையடுத்து நேற்று, இன்று என 2 நாட்களும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. மேலும் சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க மணிப்பூரில் வன்முறைக்கு நடுவே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் 3 முறை விளக்கம் கேட்டும் மணிப்பூர் மாநில நிர்வாகத்தில் இருந்து எந்த பதிலும் அளிக்காமல் இருந்த அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு ஜூன் 12ல் புகார் சென்றுள்ளது. இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் மணிப்பூர் அதிகாரிகளுக்கு தேசிய மகளிர் ஆணையம் ஜூன் 19, மே 18, மே 29 ஆகிய தேதிகளில் கடிதங்கள் எழுதின. ஆனால் அதற்கு அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்ற விபரமும் வெளியாகி உள்ளது. இதனால் இந்த விஷயத்தை மறைக்க மணிப்பூர் அதிகாரிகள் முயன்றார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா கூறுகையில், ‛‛மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக எங்களுக்கு புகார் வந்தது. ஆனால் அது மணிப்பூரில் இருந்து வரவில்லை. இதனால் வீடியோவின்(பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ) நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டி இருந்தது.

இதற்காக மணிப்பூரில் அதிகாரிகளை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இருப்பினும் நாங்கள் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினோம். இதற்கிடையே வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 3 முறை மணிப்பூர் மாநிலத்தை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. தற்போது தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணையத்தின் இந்த தகவல் தற்போது பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+