மணிப்பூர்: தமிழர்கள் வாழும் 'மோரே' மோதலில் போலீஸ் கமாண்டோ பலி- ஹெலிகாப்டர்கள் கேட்கும் மாநில அரசு!
மோரே: மணிப்பூரில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கும் மியான்மர் எல்லை நகரமான மோரேவில் பாதுகாப்பு படையினருக்கும் குக்கி ஆயுத குழுவினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் போலீஸ் கமாண்டோ ஒருவர் பலியானார். இதனால் மோரே நகரில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் 10 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 200க்கும் மேற்பட்டோர் இந்த வன்முறைகளில் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கும் குக்கி இன ஆயுத குழுவினருக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

மணிப்பூரின் மோரே நகரில் அதிக எண்ணிக்கையில் மோதல்கள் தொடருகின்றன. மோரே நகரில்தான் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர். மோரே நகரில் தமிழ் சங்கம் நடத்தும் பள்ளிக் கூடம், கோவில் ஆகியவையும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தற்போதைய மோதல்களில் தமிழர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Violence reported in Manipur's Moreh, injured shifted to Imphal pic.twitter.com/HuK7zQ5Enb
— ANI (@ANI) January 17, 2024
இந்நிலையில் இன்று காலை மோரோ நகரில் எஸ்பிஐ வங்கி கிளை அருகே வார்டு எண் 7 பகுதியில் குக்கி ஆயுத குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் இந்த சண்டை நீடித்தது. இந்த மோதலில் சமோர்ஜித் என்ற போலீஸ் கமாண்டோ துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு போலீஸ் அதிகாரி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோரே நகரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு போலீஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாதுகாப்பு படையினர் மீது குக்கி ஆயுத குழுவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இம்மோதலைத் தொடர்ந்து மோரே சுற்று வட்டார பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். மோரே நகரில் குக்கி ஆயுத குழுவினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டிருந்தது. மோரே நகரில் தொடர்ந்து மோதல்கள் நிகழ்வதால் பதற்றம் நீடித்து வருகிறது.
இதனிடையே மோரே நகரில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால் ஹெலிகாப்டர் உள்ளிட்ட வான்வழி பயண உதவிகளை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications