மணிப்பூரில் மேலும் 3 பேர் சுட்டுக் கொலை! வழக்குகளை விசாரிக்க சிபிஐ சிறப்பு குழு நியமனம்!
இம்பால்: மணிப்பூர் இனமோதல்களில் மேலும் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் இன மோதல்கள் தொடர்பாக விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை சிபிஐ நியமித்துள்ளது.
மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மோதல்கள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக நீடிக்கிறது. இம்மோதல்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள் பரவாமல் இருக்க ஒரு மாத காலமாக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூரில் முகாமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். மணிப்பூரில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தையும் அவர் நடத்தினார். இதனைத் தொடர்ந்து மணிப்பூர் இன வன்முறைகளில் முக்கியமான 6 வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் எனவும் அறிவித்தார் அமித்ஷா.

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பயணத்துக்குப் பின்னரும் தாக்குதல்கள் தொடருகின்றன. பாதுகாப்பு படையினர் மற்றும் மைத்தேயி இனக்குழுவினர் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மணிப்பூரில் நேற்றும் 3 மைத்தேயி இனக்குழுவினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனிடையே வன்முறை வழக்குகளை சிபிஐ விசாரிக்க மாநில அரசும் பரிந்துரைத்தது.
இப்பரிந்துரையை தொடர்ந்து மணிப்பூர் வன்முறை சம்பவங்களை விசாரிக்க சிபிஐ 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. மணிப்பூர் இன வன்முறைகளின் பின்னணியில் உள்ள சதி குறித்தும் இந்த குழு விசாரிக்க உள்ளது. சிபிஐ விசாரணைக் குழுவானது முதல் கட்டமாக 6 வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது.
பிரச்சனை என்ன?: மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் பழங்குடிகள் பட்டியலில் நாகா, குக்கிகள் இருந்து வருகின்றனர். இப்பட்டியலில் மைத்தேயி இன மக்களையும் சேர்க்க முயற்சிகள் நடைபெறுகிறது. இதற்கு குக்கி இனக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மைத்தேயி இனக்குழுவினரை தங்களைப் போல பழங்குடிகள் பட்டியலில் சேர்த்தால் மலைப் பகுதிகளில் தங்களுக்கே உரித்தான நில உரிமை உள்ளிட்டவை பறிபோகும் என்பது குக்கி இனத்தவர் அச்சம். இதனால் மைத்தேயி இனக்குழுவினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications