மணிப்பூர் வன்முறை சட்டம் ஒழுங்கு பிரச்சனைதான்.. அமைதி திரும்பும்: முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதுவும் இல்லை; சட்டம் ஒழுங்கு பிரச்சனைதான்.. அமைதி திரும்ப சற்று காலமாகும் என்று முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 28 நாட்களாக தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. மைத்தேயி இன மக்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்பது குக்கி இன மக்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்திதான் வன்முறைகள் வெடித்துள்ளன. கடந்த ஒரு மாத காலமாக நீடிக்கும் வன்முறையில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்துக்கு அண்மையில் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பயணம் மேற்கொண்டார். மணிப்பூர் மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோரும் மணிப்பூர் சென்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷா 4 நாட்கள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார். முதலில் ஆளுநர், முதல்வர் பைரோன் சிங், அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இன்று பல்வேறு பொதுமக்கள் அமைப்புகளுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
அதேபோல முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானும் மணிப்பூர் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களிடம் அனில் சவுகான் கூறியதாவது: மணிப்பூர் வன்முறை சம்பவங்களில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இல்லை. இது சட்டம் ஒழுங்கு பிரச்சனைதான். இதில் மாநில அரசுக்கு ராணுவம் உதவி வருகிறது.
மணிப்பூரில் ராணுவம் சிறப்பான பணியை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறோம். மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு சற்று காலதாமதமாகும். ஆனால் பிரச்சனை விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கே இரு இனக்குழுக்களிடையேயான பிரச்சனை மட்டும்தான். அதனால் நிலைமை சரியாகும். இவ்வாறு அனில் சவுகான் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக மாநில முதல்வர் பைரோன்சிங் கூறுகையில், மணிப்பூர் வன்முறையில் பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகவும் 40 தீவிரவாதிகள் வெவ்வேறு இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications