Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிப்பூர் வன்முறை சட்டம் ஒழுங்கு பிரச்சனைதான்.. அமைதி திரும்பும்: முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதுவும் இல்லை; சட்டம் ஒழுங்கு பிரச்சனைதான்.. அமைதி திரும்ப சற்று காலமாகும் என்று முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 28 நாட்களாக தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. மைத்தேயி இன மக்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்பது குக்கி இன மக்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்திதான் வன்முறைகள் வெடித்துள்ளன. கடந்த ஒரு மாத காலமாக நீடிக்கும் வன்முறையில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

Manipur Violence not link with counter insurgency: CDS General Anil Chauhan

இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்துக்கு அண்மையில் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பயணம் மேற்கொண்டார். மணிப்பூர் மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோரும் மணிப்பூர் சென்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷா 4 நாட்கள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார். முதலில் ஆளுநர், முதல்வர் பைரோன் சிங், அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இன்று பல்வேறு பொதுமக்கள் அமைப்புகளுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

அதேபோல முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானும் மணிப்பூர் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களிடம் அனில் சவுகான் கூறியதாவது: மணிப்பூர் வன்முறை சம்பவங்களில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இல்லை. இது சட்டம் ஒழுங்கு பிரச்சனைதான். இதில் மாநில அரசுக்கு ராணுவம் உதவி வருகிறது.

மணிப்பூரில் ராணுவம் சிறப்பான பணியை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறோம். மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு சற்று காலதாமதமாகும். ஆனால் பிரச்சனை விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கே இரு இனக்குழுக்களிடையேயான பிரச்சனை மட்டும்தான். அதனால் நிலைமை சரியாகும். இவ்வாறு அனில் சவுகான் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக மாநில முதல்வர் பைரோன்சிங் கூறுகையில், மணிப்பூர் வன்முறையில் பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகவும் 40 தீவிரவாதிகள் வெவ்வேறு இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+