பிரதமர் மன்மோகன் சிங்கின் கடைசி அமைச்சரவை கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான கடைசி அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது.

தனது அமைச்சரவையில் பணியாற்றியவர்களுக்கு பிரதமர் இன்று பிரவு உபசார விருந்து அளிக்க உள்ளார். இன்றைய கடைசி அமைச்சரவை கூட்டத்தில் பார்மா துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான மசோதாவுக்கு பிரதமர் ஒப்புதல் அளிக்க இருக்கிறார்.
இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர் சிங் சகாங்கை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்றைய கடைசி அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications