வேலை கிடைக்கவில்லையா?: அப்ப உங்க 'ஃபேஸ்புக் போஸ்ட்', 'ட்வீட்' தான் காரணம்
டெல்லி: வேலை கேட்டு விண்ணப்பிப்போரில் 68 சதவீதம் பேர் நிராகரிக்கப்படுவதற்கு அவர்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கும் கருத்துகள் தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
கெரியர்பில்டர் இந்தியா என்ற வேலைவாய்ப்பு இணையதளம் வேலைக்கு விண்ணப்பிப்போரில் பலர் நிராகரிக்கப்படுவது குறித்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் 1, 200 நிறுவனங்கள் கலந்து கொண்டன.
அந்த கருத்துக்கணிப்பின் முடிவின் விவரம் வருமாறு,

சமூக வலைதளங்கள்
59 சதவீத நிறுவனங்கள் சமூக வலைதளங்களில் வேலை கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் குறித்து ஆய்வு செய்கிறது. மேலும் 33 சதவீத நிறுவனங்கள் விரைவில் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளன.

இவர் வேண்டாம்
68 சதவீத நிறுவனங்கள் வேலை கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ள கருத்துகளை பார்த்து தான் அவர்களை நிராகரிக்கிறது.

கூகுள்
75 சதவீத நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற பணியாளர்களை தேர்வு செய்ய கூகுளில் அவர்களின் விவரங்களை தேடுகிறதாம்.

குடி
வேலை கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் சமூக வலைதளங்களில் மது அருந்துவது, போதைப் பொருள் உட்கொள்வது பற்றி கூறுவதும், முன்னாள் முதலாளி அல்லது நிறுவனம் குறித்து அவதூறாக பேசுவதும், மோசமான புகைப்படங்களை வெளியிடுவதும் அவர்கள் நிராகரிக்கப்பட கூறப்படும் காரணங்களில் சில.

வேலை
வேலை தேடுபவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கையில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications