சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுள் தாக்குதல்- 11 போலீசார் பலி! 400 பேர் சரணடைவதாக அறிவித்ததற்கு பதிலடி?
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பஸ்தார் பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் 11 போலீசார் உயிரிழந்தனர். போலீசார் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பள்ளத்தாக்கு மாவோயிஸ்டுகளின் கோட்டையாகும். சத்தீஸ்கர், ஆந்திரா, ஒடிஷா 3 மாநில எல்லைகளை இணைக்கக் கூடிய மலைத் தொடர்களில் மாவோயிஸ்டுகள் கை ஓங்கியே இருக்கிறது.

ஒடிஷா, சத்தீஸ்கர், ஆந்திராவின் இந்த மலைப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் சென்றடையாத வகையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்களை நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளின் தாக்குதல் எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்திருந்தது.
மாவோயிஸ்டுகளுக்கு பக்க பலமாக இருந்த ஆதி பழங்குடி இன மக்கள், மைய வாழ்க்கைக்கு திரும்பி அரசின் நல உதவிகளைப் பெற்று வருவது மிக முக்கியமான காரணமாகும். அதேநேரத்தில் இன்னமும் சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திராவின் தன்டகாருண்யா, தண்டேவடா வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தேடுதல் நடவடிக்கைக்காக பெருமளவு துணை ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆண்டுதோறும் 400 மாவோயிஸ்டுகள் சரணடைந்து மாநில அரசின் உதவி பெற்று வாழ்வதாக அம்மாநில போலீசார் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருந்தனர். இந்த பேட்டி விவாதப் பொருளாகி இருந்தது.
போலீசாரின் இத்தகைய பேட்டிகளுக்கு பதில் தரும் வகையில் மாவோயிஸ்டுகள் இன்று சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் பயங்கர தாக்குதல் நடத்தினர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனத்தை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 10 போலீசார் உயிரிழந்தனர். மேலும் போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications