சத்தீஸ்கர்ரில் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள்- அதிர்ச்சி தகவல்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் ராக்கெட் லாஞ்சர்கள் மூலமாகவும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாவோயிஸ்டுகளின் இருப்பு அண்மைக்காலமாக கேள்விக்குறியாகி இருந்தது. மாவோயிஸ்டுகளின் வசமுள்ள வனப்பகுதிகளுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்கின்றன.
இதனால் மாவோயிஸ்டுகளுக்கு கடும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 2000 பாதுகாப்பு படையினர் சத்தீஸ்கரின் சுக்மா, பிஜாபூர் மாவட்டங்களின் வனப்பகுதிகளில் கூட்டாக தேடுதல் நடவடிக்கை மேற்கொன்டனர்.

மாவோயிஸ்டுகளுடன் மோதல்
ஜோனகுடா என்ற மாவோயிஸ்டுகளின் முக்கியமான இடத்தை பாதுகாப்பு படை வீரர்கள் நெருங்கினர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் தொடங்கியது.

22 வீரர்கள் வீரமரணம்
இந்த மோதலில் 22 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 31 வீரர்கள் படுகாயமடைந்தனர். இதில் 15 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த சண்டையின் போது மாவோயிஸ்டுகள் இலகு மற்றும் கனரக ஆயுதங்கள், தானியங்கி துப்பாக்கிகளை பயன்படுத்தினர்.

மாவோயிஸ்டுகளின் ராக்கெட் லாஞ்சர்கள்
அத்துடன் ராக்கெட் லாஞ்சர்கள் மூலமாகவும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அதாவது மாவோயிஸ்டுகள் நவீன ஆயுதங்களுடன் வனப்பகுதிகளில் பதுங்கி இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது என்கின்றனர் பாதுகாப்புப் படையினர்.

அமித்ஷா இரங்கல்
இதனிடையே சத்தீஸ்கரில் 22 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலை தொடர்பு கொண்டும் அமித்ஷா பேசினார். அதேபோல் சி.ஆர்.பி.எப். இயக்குநர் குல்தீப்சிங்கை சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்று ஆய்வு செய்யவும் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications