Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு காஷ்மீர் வெள்ளம்: 200 பேர் பலி! 25,000 பேர் மீட்பு- லட்சக்கணக்கானோர் தவிப்பு!!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவித்த 25,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் சிக்கியுள்ள லட்சக்கணக்கானோரை மீட்கும் பணியில், இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு "இமாலய சுனாமி' எனப்படும் பலத்த மழை வெள்ளம் ஏற்பட்டதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதுபோன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தற்போது திடீர் மழை, வெள்ளப் பெருக்கு நேரிட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் ஓடும் முக்கிய நதிகள், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

200 பேர் பலி

200 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கைப் பேரழிவுக்கு, இதுவரை 200 பேர் பலியாகி விட்டனர்.

லட்சம் பேர் தவிப்பு

லட்சம் பேர் தவிப்பு

இதுதவிர வெள்ளம் சூழ்ந்திருக்கும் பகுதிகளில், லட்சக்கணக்கானோர் சிக்கித் தவிப்பதால், அவர்களை மீட்கும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் மீட்புப் பணிகளுக்காக கூடுதல் தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர்களை படகுகள், மீட்புச் சாதனங்களுடன் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த மீட்புப் பணியில், இந்திய கடற்படை வீரர்களும் முதல்முறையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

25 ஆயிரம் பேர் மீட்பு

25 ஆயிரம் பேர் மீட்பு

இதுவரை நடைபெற்ற மீட்புப் பணிகளில், 25,000 பேரை இந்திய ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்டுள்ளனர். அவர்களில், ராணுவத்தினர், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 1,400 பேரும் அடங்குவார்கள். மீட்கப்பட்ட அனைவரும், உயரமான பகுதிகளில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

டால் ஏரியில்..

டால் ஏரியில்..

ஸ்ரீநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை மழையின் அளவு குறைந்திருந்தது. இதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சூழ்ந்திருந்த நீரின் அளவும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. எனினும், ஸ்ரீநகரில் "டால்' ஏரியில் வெள்ளத்தின் அளவு அதிகரித்துள்ளது.

45 விமானங்கள்

45 விமானங்கள்

ஸ்ரீநகரில் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பதற்காக பல இடங்களில் வீடுகளின் கூரைகள் மீதும், வீடுகளின் மேல்தளங்களிலும் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இதையடுத்து அவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில், இந்திய விமானப் படையைச் சேர்ந்த 45 விமானங்களும், ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+