பிரபல மலையாள பத்திரிகையாளர் கே.கே.ஸ்ரீதரன் நாயர் மறைவு
கொச்சி : பிரபல எழுத்தாளரும் மாத்ருபூமி பத்திரிகை முன்னாள் ஆசிரியருமான கே.கே.ஸ்ரீதரன் நாயர் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார்.
ஸ்ரீதரன் நாயர், மாத்ருபூமி பத்திரிக்கையில் கடந்த 1953-ம் ஆண்டு உதவி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் சீனியர் உதவி ஆசிரியர், முதன்மை உதவி ஆசிரியர் என படிப்படியாக பதவி உயர்வுபெற்ற அவர் அந்த பத்திரிக்கையின் ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.
அவர் கடந்த 1990-ம் ஆண்டு முதல் பத்து வருடங்களாக மாத்துருபூமி பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றினார்.இதழியல்துறையில் டிப்ளமோவில் முதுநிலை பட்டம் பெற்று மலையாள பத்திரிக்கைத் துறையில் சேர்ந்த முதல் நபர் என ஸ்ரீதரன் நாயர் கருதப்படுகிறார்.
முதுமை காரணமாக, 86 வயதான நாயர் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் அவர் திடீரென உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, நகரிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரன் நாயர் காலமானார்.