"தலித் துணை முதல்வர்".. இங்கே இல்லை.. மாயாவதியின் முழக்கத்தால் ஹரியானாவில் அதிரும் காங்கிரஸ், பாஜக!
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களே (அக்டோபர் 5) இருக்கும் நிலையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய தேசிய லோக் தள் கூட்டணி முன்வைத்திருக்கும் "நாங்கள் வென்றால் தலித் ஒருவரை துணை முதல்வராக்குவோம்" என்ற முழக்கம் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடம் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ந் தேதி நடைபெற உள்ளது. ஹரியானா தேர்தலுக்கான இறுதிக் கட்ட பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் படுதீவிரமாக இறங்கி உள்ளன.

ஹரியானாவில் 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிராக மிகப் பெரும் அதிருப்தி அலை வீசுகிறது. இதனை சமாளிக்க மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை முன்வைத்து பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியோ எப்படியும் ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிற மிதப்பில்தான் இருந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர்களைப் பொறுத்தவரை பிரசாரத்தில் கவனம் செலுத்துவதை விட யாருக்கு முதல்வர் பதவி என்கிற போட்டியில்தான் தீவிரம் காட்டுகின்றனர்.
காங்கிரஸுக்கு கிடைக வேண்டிய பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்க ஆம் ஆத்மி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ்- இந்திய தேசிய லோக் தள் கூட்டணி ஆகியவையும் களத்தில் தீவிரம் காட்டுகின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில் பகுஜன் சமாஜ் கட்சி, அதன் தலைவர் மாயாவதிக்கு ஹரியானா தேர்தலில் அதீத முக்கியத்துவம் இந்த முறை கிடைத்து வருவதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி- இந்திய தேசிய லோக் தள் கட்சிகள் தலித் மற்றும் ஜாட் வாக்குகளை குறிவைத்தே களம் காண்கின்றன. அதுவும் மாயாவதி முன்வைத்த அதிரடி முழக்கமான "துணை முதல்வர்கள்" பதவி ஆதிக்கம் செலுத்தும் ஜாதிகளிடையே சலசலப்பையும் ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய தேசிய லோக் தள்- பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வென்றால், லோக் தள் கட்சியின் அபய் சவுதாலாதான் முதல்வர் என அறிவித்ததுடன், ஒரு தலித் துணை முதல்வர், பிற்படுத்தப்பட்ட அல்லது முற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த மற்றொரு துணை முதல்வர் நியமிக்கப்படுவர் எனவும் பிரகடனம் செய்தார்.
ஹரியானா தேர்தல் களத்தில் பகிரங்கமாக துணை முதல்வர்கள் பதவி குறித்து எந்த கட்சியும் எந்த ஒரு நிலைப்பாட்டையும் வைக்காத நிலையில் மாயாவதி கூட்டணி இப்படி பிரசாரம் செய்வது கவனத்தைப் பெற்றுள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். கடந்த தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்ற தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி இந்த முறை கூடுதல் கவனம் செலுத்தி பிரசாரம் செய்வதும் கவனிக்க வைத்திருக்கிறது. மாயாவதியின் இந்த வியூகமும் முழக்கங்களும் காங்கிரஸ், பாஜகவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications