அழுகிய நிலையில் சிதிலமடைந்த உடல்.. மேகாலயா சுரங்கத்திலிருந்து ஒருவரின் உடல் மீட்பு!
மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களில் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் தற்போது மீட்கப்பட்டு இருக்கிறது.
ஷில்லாங்: மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களில் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் தற்போது மீட்கப்பட்டு இருக்கிறது.
மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் சிக்கி இருக்கும் நபர்களை மீட்கும்படி இன்னும் நடந்து வருகிறது. அந்த சுரங்கத்தில் சிக்கியவர்கள் அனைவரும் இருந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
39 நாட்களுக்கு முன் 15 பணியாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினார்கள். இப்போதுதான் அங்கிருந்து முதல் நபரின் உடல் மீட்கப்பட்டு இருக்கிறது.

சுரங்கத்தில் சிக்கினார்கள்
ஒரு மாதம் முன் மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டது. அங்கு இருக்கும் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் அனுமதி பெறப்படாத நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கடந்த டிசம்பர் 12ம் தேதி குகைக்குள் இருந்த 15 பேரும் நீரில் சிக்கினார்கள்.

மிக மெதுவாக நடந்தது
சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் 39 நாட்களாக இந்த மீட்பு பணியில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை. சுரங்கத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றுவது கடினமான பணியாக இருந்ததால் யாரையும் மீட்க முடியவில்லை.

கண்டுபிடித்தனர்
கடந்த 7 நாட்களுக்கு முன் அந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் Underwater Remotely Operated Vehicle எனப்படும் சிறிய ரோபோட் மோட்டார் வாகனம் மூலம் இவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைடுத்தே சுரங்கத்தில் இருந் மற்றவர்களும் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

மீட்கப்ட்டது
தற்போது மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களில் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு இருக்கிறது. அவரின் உடல் மிகவும் சிதிலமடைந்து அழுகி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இவரின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மீதமுள்ளவர்களை மீட்கும்பணி நடந்து வருகிறது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications