தீவிரவாத தாக்குதலில் அமர்நாத் பயணிகள் 7 பலி.. காஷ்மீர் முதல்வர், ஆளுநர் நேரில் அஞ்சலி

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பலியான அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேரின் உடலுக்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் ஆளுநர் என்.என்.வோஹ்ரா, துணை முதல்வர் நிர்மல் குமார் சிங் ஆகியோர் மலர் வளையம்

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதால் 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். அவர்களின் உடலுக்கு காஷ்மீர் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி தங்களின் பயணத்தைத் தொடங்கினர்.

Mehbooba Mufti Pays tribute Amarnath Yatrigas

இந்நிலையில், நேற்று இரவு அனந்தநாக் மாவட்டம் பாடிங்கு என்ற பகுதி வழியாக யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். அதில், 7 யாத்ரீகர்கள் பரிதாபமாக பலியாகினர். 3 போலீசார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

தீவிரவாதத்திற்கு பலியான 7 பேரின் உடலுக்கு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி, ஆளுநர் என்.என்.வோஹ்ரா, துணை முதல்வர் நிர்மல் சிங்க் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+