இந்த தேசத்தை தலைகுனிய விடமாட்டேன்...- பாஜக கீதம் 'சபதத்தில்' மோடி முழக்கம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த நாட்டை யாருக்கும் அடிபணிய விடமாட்டேன் என பாஜக வெளியிட்டுள்ள 'சபதம்' பாடலில் முழங்கியுள்ளார் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.

தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக பாஜக கீதம் என்ற பெயரில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளது அக்கட்சி.

இதன் குறுந்தகட்டை நேற்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் 'பாரத வெற்றிப் பேரணி' தொடக்க விழாவில் வெளியிட்டனர்.

'Mein Desh Nahi Mitne Dunga' - This is Modi's 'Sougandh' in BJP Anthem

இந்தப் பாடலை சைய்ய சைய்ய.. புகழ் சுக்வீந்தர் சிங் பாடியுள்ளார். ஆதேஷ் ஸ்ரீவத்சவா இசையில், பிரசூன் ஜோஷி எழுதியுள்ளார்.

இந்த பாஜக ஆல்பத்தின் சிறப்பே, நரேந்திர மோடி தன் குரலில் சில வரிகளை வாசித்திருப்பதுதான். சில வரிகளை லேசாக ராகம் போட்டும் படித்துள்ளார் மோடி. அவரது குரல் இந்த ஒற்றைப் பாடல் ஆல்பத்துக்கு கூடுதல் சுவாரஸ்யத்தைச் சேர்த்துள்ளது.

சௌகந்த் - மெய்ன் தேஷ் நஹின் ஜூக்னே தூங்க்கா... (சபதம் - என் தேசத்தை தலைகுனிய விடமாட்டேன்!) என்ற தலைப்பில் இந்த ஆல்பம் வெளியாகியுள்ளது.

இந்த ஆல்பத்தில் நரேந்திர மோடி படித்துள்ள கவிதை வரிகளின் தமிழாக்கம் இது:

என் நாட்டை புழுதியில் மங்கிப் போக விடமாட்டேன்
என இந்த மண்ணில் சபதம் ஏற்கிறேன்...

ஆனால் இந்த தேசத்து மக்கள் விழித்துக் கொண்டனர்,
ஒவ்வொரு இந்தியனும் வெல்வான்..

இந்த தேசத்தை யாருக்கும் அடிபணிய விடமாட்டேன்...
யார் முன்னும் தலைகுனிய விடமாட்டேன்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+