For Daily Alerts
Just In
வாஜ்பாய்க்கு டெல்லி விஜய்காட் பகுதியில் ஒன்றரை ஏக்கரில் நினைவிடம்!
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டெல்லி விஜய்காட் பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் அமைக்கப்படவுள்ளது.
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டெல்லி விஜய்காட் பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் அமைக்கப்படவுள்ளது.
முன்னாள் பிரதமரான வாஜ்பாய் 1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி குவாலியரில் பிறந்தார். 50 ஆண்டுகள் எம்பியாக இருந்த வாஜ்பாய், மூன்று முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.
கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வாஜ்பாய் இன்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாஜ்பாய்க்கு ஒன்றரை ஏக்கரில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லி விஜய்காட் பகுதியில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Memorial hall to set up in Delhi Vijay ghat area.