விமான கண்காட்சி: பெங்களூரில் குவியும் வெளிநாட்டு விமானங்கள்
பெங்களூர்: பெங்களூர் விமான கண்காட்சியில் கலந்து கொள்ள பல நாட்டு விமானங்கள் ஏலஹன்கா வரத் துவங்கிவிட்டன.
பாதுகாப்புத் துறை நடத்தும் 10வது விமான கண்காட்சி வரும் 18ம் தேதி பெங்களூரில் உள்ள ஏல்ஹன்கா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள பன்னாட்டு விமானங்கள் ஏலஹன்கா வரத் துவங்கியுள்ளன.

கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ள சில போர் விமானங்கள் ஏற்கனவே பயிற்சியைத் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கண்காட்சி வேலைகளை கவனித்து வரும் அதிகாரி ஒருவர் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,

பல நாடுகளில் இருந்து விமானங்கள் வரத் துவங்கியுள்ளதால் விமானங்கள் நிறுத்துமிடம் நிரம்பி வருகிறது. ஹெச்.ஏ.எல். விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன என்றார்.

பிரான்ஸ் விமானப்படையின் ஏர்பஸ் ஏ400எம் ஏலஹன்கா வந்துவிட்டதாம். மேலும் 3 விமானங்கள் பிரான்ஸில் இருந்து வர உள்ளன. எப்-16 ரக விமானங்களும் வந்துள்ளன. இந்திய விமானப்படையின் சி-17, எம்ஐ-17 விமானங்களும் ஏலஹன்கா வந்துள்ளன.
மோடி:
விமான கண்காட்சியை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி காலை 9 மணிக்கு ஏலஹன்கா வருகிறார். துவக்க விழா இரண்டரை மணிநேரம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இதையொட்டி ஏலஹன்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காட்சி துவங்க 48 மணிநேரத்திற்கு முன்பு ஏலஹன்கா விமானப்படை தளம் சிறப்பு பாதுகாப்பு பிரிவின் கண்காணிப்பில் வந்துவிடும்.

இம்முறை விமான கண்காட்சியில் சுமார் 70 விமானங்கள் கலந்து கொள்கின்றன. இந்த கண்காட்சியில் இந்தியாவின் பெருமையான இலகுரக விமானமான தேஜாஸ் அனைவரின் கவனத்தையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான கண்காட்சியில் இந்திய அணிகள் த்ருவ், ருத்ரா, சுகோய், டைகர் மோத் ஆகிய விமானங்களை ஓட்ட உள்ளன. கண்காட்சியில் எப்-15சி ஈகிள், லாக்ஹீட் எப்-16சி, போயிங் கேசி-17, ரபால் மற்றும் எம்ப்ரார் இஎம்பி-145ஐ ஆகிய வெளிநாட்டு விமானங்கள் பங்கேற்கின்றன.

இது தவிர பிசி-12என்ஜி, பால்கன் 2000, பெனாம் 100இ, போயிங் பி-75, போயிங் ஏ- 75, வைக்கிங், கேட்வாக், ஆர்ஆர்ஜே 95, பெல் 407 ஜிஎக்ஸ் ஹெலிகாப்டர், கிங் ஏர் 350 இஆர் உள்ளிட்ட ஏராளமான விமானங்களும் கண்காட்சியில் கலந்து கொள்கின்றன.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications