விமான கண்காட்சி: பெங்களூரில் குவியும் வெளிநாட்டு விமானங்கள்
பெங்களூர்: பெங்களூர் விமான கண்காட்சியில் கலந்து கொள்ள பல நாட்டு விமானங்கள் ஏலஹன்கா வரத் துவங்கிவிட்டன.
பாதுகாப்புத் துறை நடத்தும் 10வது விமான கண்காட்சி வரும் 18ம் தேதி பெங்களூரில் உள்ள ஏல்ஹன்கா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள பன்னாட்டு விமானங்கள் ஏலஹன்கா வரத் துவங்கியுள்ளன.

கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ள சில போர் விமானங்கள் ஏற்கனவே பயிற்சியைத் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கண்காட்சி வேலைகளை கவனித்து வரும் அதிகாரி ஒருவர் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,

பல நாடுகளில் இருந்து விமானங்கள் வரத் துவங்கியுள்ளதால் விமானங்கள் நிறுத்துமிடம் நிரம்பி வருகிறது. ஹெச்.ஏ.எல். விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன என்றார்.

பிரான்ஸ் விமானப்படையின் ஏர்பஸ் ஏ400எம் ஏலஹன்கா வந்துவிட்டதாம். மேலும் 3 விமானங்கள் பிரான்ஸில் இருந்து வர உள்ளன. எப்-16 ரக விமானங்களும் வந்துள்ளன. இந்திய விமானப்படையின் சி-17, எம்ஐ-17 விமானங்களும் ஏலஹன்கா வந்துள்ளன.
மோடி:
விமான கண்காட்சியை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி காலை 9 மணிக்கு ஏலஹன்கா வருகிறார். துவக்க விழா இரண்டரை மணிநேரம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இதையொட்டி ஏலஹன்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காட்சி துவங்க 48 மணிநேரத்திற்கு முன்பு ஏலஹன்கா விமானப்படை தளம் சிறப்பு பாதுகாப்பு பிரிவின் கண்காணிப்பில் வந்துவிடும்.

இம்முறை விமான கண்காட்சியில் சுமார் 70 விமானங்கள் கலந்து கொள்கின்றன. இந்த கண்காட்சியில் இந்தியாவின் பெருமையான இலகுரக விமானமான தேஜாஸ் அனைவரின் கவனத்தையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான கண்காட்சியில் இந்திய அணிகள் த்ருவ், ருத்ரா, சுகோய், டைகர் மோத் ஆகிய விமானங்களை ஓட்ட உள்ளன. கண்காட்சியில் எப்-15சி ஈகிள், லாக்ஹீட் எப்-16சி, போயிங் கேசி-17, ரபால் மற்றும் எம்ப்ரார் இஎம்பி-145ஐ ஆகிய வெளிநாட்டு விமானங்கள் பங்கேற்கின்றன.

இது தவிர பிசி-12என்ஜி, பால்கன் 2000, பெனாம் 100இ, போயிங் பி-75, போயிங் ஏ- 75, வைக்கிங், கேட்வாக், ஆர்ஆர்ஜே 95, பெல் 407 ஜிஎக்ஸ் ஹெலிகாப்டர், கிங் ஏர் 350 இஆர் உள்ளிட்ட ஏராளமான விமானங்களும் கண்காட்சியில் கலந்து கொள்கின்றன.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications