மிக் 17 ரக ஹெலிகாப்டரின் பிளாக் பாக்ஸ் எங்கே.? நீடிக்கும் மர்மம்.. உள்ளூர்வாசிகள் மீது சந்தேகம்
பட்காம்: கடந்த பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரின் பட்காம் பகுதியில் விபத்தில் சிக்கிய ஐஏஎஃப் மிக் 17 ரக வி5 ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி, எங்கே சென்றது என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது.
புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியான 40 வீரர்கள் வீர மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரியில் போர் விமானங்களில் 1000 கிலோ எடை வெடிபொருட்களுடன் சென்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கியது.

அந்த சமயத்தில் இருநாட்டு எல்லைப் பகுதிகளிலும் பெரும் பதற்றம் நிலவியது. இதனையடுத்து காஷ்மீரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் ஹெலிகாப்டர் தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது. இதில் 6 விமானப்படை வீரர்கள் மற்றும் ஒரு கிராமவாசி உயிரிழந்தனர்.
ஆனால் இந்த விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியானது தற்போது வரை மீட்கப்படவில்லை. விபத்து நடந்தது முதலே மிக் 17 ரக ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி காணவில்லை. விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரேனும் அதனை எடுத்து சென்றிருக்கலாம் என அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
எனினும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கும் என்றே கருதுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்
விபத்து நடந்த பகுதிக்கு அருகே வசிக்கும் பாத்திமா என்ற பெண்மணி கூறுகையில், பல அதிகாரிகள் வந்து பல முறை தன்னிடம் அந்த டப்பாவை பற்றி விசாரித்து விட்டனர். ஆனால் நான் அது மாதிரியான எந்த டப்பாவையும் பார்க்கவில்லை என நடந்ததை கூறியுள்ளதாக குறிப்பிட்டார்.
தங்கள் கிராமத்திற்கு புதிதாக யார் வந்தாலும் சரி முதலில் அந்த டப்பாவை பார்தீர்களா என்ற கேள்வியை தான் கேட்பதாக சலித்து கொண்டார். இது குறித்து கூறிய விமானப்படை அதிகாரிகள் நிச்சயமாக உள்ளூர் மக்களால் தான் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி திருடப்பட்டுள்ளது.
இதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் கூடிய விரைவில் கொள்ளை போன கருப்பு பெட்டியை மக்களிடமிருந்து மீட்போம் என நம்பிக்கை தெரிவித்தனர்
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications