ஆட்டுக்கு இலை பறிக்க சென்ற 10 வயது சிறுமி தெருநாய்கள் கடித்துக் குதறியதில் பலி

Subscribe to Oneindia Tamil

ம.பி.: ஆட்டுக்கு இலை பறிக்க சென்ற 10 வயது சிறுமி தெருநாய்கள் கடித்துக் குதறியதில் பலி

போபால்: மத்திய பிரதேசத்தில் 10 வயது சிறுமியை தெரு நாய்கள் சேர்ந்து கடித்துக் குதறியதில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

Minor girl mauled to death by stray dogs in MP

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள அதல்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் வாஸ்கலே. அவரின் மகள் பூஜா(10). தினேஷ் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் ஆடுகளுக்கு போட இலை பறிக்க பூஜா வெளியே சென்றுள்ளார். அப்போது தெருநாய்கள் சில சேர்ந்து பூஜாவை கடித்துக் குதறின. இதை பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் ஓடிவந்து நாய்கள் விரட்டிவிட்டனர்.

அதற்குள் பூஜா இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்த பிறகு பூஜாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+