கேரளாவில் காணாமல் போன மாணவிகளில் 2 பேர் பிணமாக கண்டெடுப்பு - ஒருவர் படுகாயம்
பாலக்காடு: கேரள மாநிலத்தின் பத்தினம் திட்டா பகுதியில் கடந்த ஜூலை 10 தேதி முதல் காணாமல் போன 3 மாணவிகளில், இருவர் ரயில்வே தணடவாளம் அருகில் பிணமாகக் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், ஒருவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டப்பாலத்திற்கு அருகில் மங்காரா - லக்கிடி ரயில் நிலையத்தின் ரயில்வே தண்டவாளத்தில் இருந்து அவர்களுடைய உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் கடந்த மாதம் 10ம் தேதியன்று கொன்னியில் உள்ள தங்களது வீடுகளில் இருந்து திடீரென்று மாயமாகினார்கள்.
பத்தினம் திட்டா போலீசாரும், மாணவிகளின் உறவினர்களும் உடல்கள் வைக்கப்பட்டுள்ள திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். தப்பிப் பிழைத்த ஒரு மாணவி மட்டும் தலையில் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்குச் செல்வதாக சொல்லிச் சென்ற மாணவிகள் மாலையில் வீடு திரும்பாமல் போனதனையடுத்து போலீசாரும், உறவினர்களும் அவர்களைத் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications