நவராத்திரி விழாவில் மோதல்: பீகார் அமைச்சரை உயிரோடு எரித்துக்கொல்ல முயற்சி - 6 பேர் கைது
பாட்னா: பீகாரில் நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட அம்மாநில அமைச்சரை, மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்துக் கொல்ல முற்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் சாசரம் பகுதியில் தரசாண்டி கோவில் உள்ளது. நவராத்திரி விழா கொண்டாட்டம் காரணமாக கடந்த திங்களன்று மாலை அந்த கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில், அம்மாநில அமைச்சர் வினய் பீகாரி, அம்மாவட்ட நீதிபதி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டுப்புற பாட்டு கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அப்போது மைக் கோளாறு காரணமாக அக்கலை நிகழ்ச்சி அங்கு கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று வன்முறையில் இறங்கியது.
விழா மேடையை நோக்கி கற்கள் மற்றும் நாற்காலிகளை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது நாற்காலி ஒன்று போலீஸ் சூப்பிரண்டு மேல் விழுந்ததில், அவர் பலத்த காயமடைந்தார்.
வன்முறையைக் கட்டுப் படுத்த போலீஸ் முயற்சித்துக் கொண்டிருந்த போது, அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி அமைச்சரை உயிரோடு எரித்துக் கொல்ல முயற்சித்தது. ஆனால், அப்பெட்ரோல் குண்டுகள் மேடையின் வேறு பகுதியில் விழுந்ததால், அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதற்கிடையே அமைச்சரின் அரசு வாகனத்தையும் அக்கும்பல் தீ வைத்து எரித்தது. இதனால், தீப்பற்றி எரிந்த மேடையிலிருந்து அமைச்சர் உள்ளிட்டோரைப் பாதுகாப்பாக மாற்று வாகனம் மூலம் போலீசார் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பெட்ரோல் கலந்த பாட்டீல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அடையாளம் தெரியாத 500 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications