மியான்மர் தாக்குதலில் பங்கேற்ற கமாண்டோக்கள் படங்களை வெளியிடவில்லை: பாதுகாப்பு அமைச்சகம்
டெல்லி: மியான்மருக்குள் நுழைந்து தீவிரவாதிகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்த நடவடிக்கையில் ஈடுபட்ட கமாண்டோக்களின் புகைப்படங்கள் எதனையும் வெளியிடவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 4-ந் தேதி 4 தீவிரவாதிகளின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய தாக்குதலில் 18 ராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அருணாசலப் பிரதேசத்திலும் ராணுவ முகாம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இத்தாக்குதல்களை நடத்தி வரும் தீவிரவாதிகளை அழிப்பதற்காக மியான்மருக்குள் நுழைந்து இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் புகைப்படங்களுடன் வெளியாகி இருந்தன.
ஆனால் தங்கள் நாட்டுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்திய ராணுவத்தின் இந்த அதிரடித் தாக்குதல் நடவடிக்கை தொடர்பான புகைப்படங்கள் வெளியானதில் சர்ச்சையும் ஏற்பட்டு வருகிறது.
இத்தகைய முக்கியமான தாக்குதல்களை நடத்திய ராணுவ கமாண்டோக்களின் படங்களை எப்படி ஊடகங்கள் வெளியிடலாம் என முன்னாள் ராணுவ அதிகாரிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் ராணுவ கமாண்டோக்கள் மற்றும் மியான்மர் ராணுவ நடவடிக்கை தொடர்பான படங்களை வெளியிடவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சிதன்ஷூ கர், வடகிழக்கு மாநிலங்களில் இந்தியா-மியான்மர் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை தொடர்பான எந்த புகைப்படத்தையும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை" என மறுத்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications