நேராக மோத வலிமை இல்லாமல் தீவிரவாதிகள் மூலம் மறைமுகமாக மோதும் பாக்.: மோடி தாக்கு
ஜம்மு: நேராக மோதாமல் தீவிரவாதிகள் மூலம் பாகிஸ்தான் மறைமுக போர் நடத்துவதை பிரதமர் மோடி கண்டித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் மற்றும் சியாச்சின், லடாக் ஆகிய பகுதிகளுக்கு இன்று வருகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் இன்று காலை கார்கில் வந்தார். கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போருக்கு பின் அந்த பகுதிக்கு வந்துள்ள முதல் பிரதமர் மோடி தான்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாம்பூர் நகரில் திங்கிட்கிழமை இரவு எல்லை பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது தீவிரவாதிகள் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 7 வீரர்கள் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் அனைவரும் பதாமி பாக் கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மோடி இன்று ஜம்மு காஷ்மீர் வந்துள்ள நிலையில் இந்த தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இதற்கிடையே எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடக்கும் செயல்களும் அவ்வப்போது நடக்கிறது. இந்தியா அத்துமீறியதாக பாகிஸ்தானும், பாகிஸ்தான் அத்துமீறியதாக நம் வீரர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மோடி லடாக் வந்துள்ளது இதுவே முதல் முறையாகும். ஆனால் அவர் பிரதமராக பதவியேற்ற பிறகு ஜம்மு காஷ்மீர் வந்துள்ளது இது இரண்டாவது முறை ஆகும். அவர் லே பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் சுடாக் நீர் மின் நிலைய திட்டம், நிமூ பாஸ்கா நீர் மின் நிலைய திட்டம் மற்றும் லே-ஸ்ரீநகர் மின்தட திட்டம் ஆகியவற்றை துவங்கி வைத்தார்.
கூட்டத்தில் பேசிய மோடி கூறுகையில், நம் அண்டை நாடு நம்முடன் நேருக்கு நேர் மோதும் வலிமையை இழந்துவிட்டது. அதனால் தான் தீவிரவாதிகள் மூலம் மறைமுகப் போர் நடத்துகிறது. இந்த மறைமுக போரில் தான் நம் வீரர்கள் அதிக அளவில் பலியாகிறார்கள் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications