பிகாரில் மோடி பலூனை பஞ்சராக்கிவிட்டேன்: லாலு பிரசாத் யாதவ்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பிகாரில் மோடி பலூனை பஞ்சராக்கிவிட்டேன் என்று ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ் தெரிவித்தார்.

இதுகுறித்து பேட்டியொன்றில் அவர் கூறியிருப்பதாவது:

வாக்காளர்கள் மனநிலையை பார்க்கும்போது, பிகாரின் 40 தொகுதிகளிலும் ராஷ்டிரிய ஜனதாதளம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறேன். நரேந்திரமோடி அலை என்பது போலியானது. 2004ம் ஆண்டு இந்தியா ஒளிர்கிறது என்று வாஜ்பாய் ஆட்சி கால சாதனைகளை சொல்லி பாஜகப பிரச்சாரம் செய்தது.

Modi's balloon was punctured by me, says Lalu Prasad

ஆனால் தோல்வியையே சந்தித்தது. இம்முறை அவர்கள் நமோ மந்திரத்தை உச்சரிக்கிறார்கள். அதுவும் பலிக்காது. மீடியாக்களில் மட்டுமே பாஜக காணப்படுகிறது. மே 16ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகும் போது அனைவருக்கும் இதுபற்றி தெரியவரும்.
நான் ஏற்கனவே பிகாரில் மோடி பலூனை உடைத்துவிட்டேன்.

திரும்பவும் அரசியல் பிரவேசம் செய்வது குறித்து எனக்கு அக்கறையில்லை. நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதே எனது நோக்கம். பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே மக்கள் அதற்கு அனுமதி கொடுக்க கூடாது. மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய ராஷ்டிரிய ஜனதாதளம் உதவி செய்யும். 17 ஆண்டுகளாக மதவாதிகளின் மடியில் தவழ்ந்த பிகார் முதல்வர் நித்தீஷ் குமார்,

இப்போது தன்னை மதசார்பற்றவராக காட்டிக்கொண்டு பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ளார். இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+