For Daily Alerts
Just In
மோடி நிச்சயமாக இந்தியாவின் பிரதமர் ஆவார்... தாயார் நம்பிக்கை
காந்திநகர்: மோடி நிச்சயம் இந்தியாவின் பிரதமராவார் என அவரது தாயார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள குஜராத் முதல்வர் மோடியும் நாடு முழுவதும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக பாஜக கூறி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குஜராத்தின் லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார் மோடியின் 77 வயது தாயார் ஹிராபென் மோடி.
அப்போது அவர், 'நரேந்திர மோடி நிச்சயமாக நாட்டின் பிரதமர் ஆவார், இதை நூறு சதவீதம் நான் உறுதியாக கூறுகிறேன்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Comments
English summary
While Narendra Modi is busy promoting himself via rallies throughout the country, his mother expressed confidence on his son becoming the next PM.
Story first published: Friday, May 2, 2014, 18:21 [IST]