Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.9,000 எல்லாம் ஒரு சம்பளமா? உழைப்பு சுரண்டல்.. மறுபரிசீலனை செய்ய ஒடிசா அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை

Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர்: ஊர்காவல் படையினருக்கு மாதம் ரூ.9,000 ஊதியம் வழங்குவது உழைப்புச் சுரண்டல் என்றும், இந்த ஊதியத்தை ஒடிசா மாநில அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் ஊர்காவல் படை வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவாக உள்ளதாக ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இதனை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம், ஒருநாளைக்கு ரூ.533-ஐ ஊதியமாக வழங்குமாறு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஒடிசா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒடிசா மாநிலத்தில் காவலர்களுக்கு மாதம் ரூ.9,000 மட்டும் ஊதியமாக வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இருவேறு ஊதியம்

இருவேறு ஊதியம்

ஒடிசா மாநிலத்தில் காவல்துறையில் பணிபுரிபவர்கள், மாதம் சுமார் ரூ.21,700-ஐ ஊதியமாக பெறுகிறார்கள். ஏழாவது ஊதியக் குழு பிரிந்துரையின் அடிப்படையில் அகவிலைப்படியும் அவர்களுக்கு கிடைக்கிறது. அதே நேரம் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊர்காவல் படை வீரர்களுக்கு ரூ.9,000 மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

இதெல்லாம் ஒரு சம்பளமா?

இதெல்லாம் ஒரு சம்பளமா?

இதனை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம், "மாதம் வெறும் ரூ.9,000 ஊதியம் கொடுப்பது அப்பட்டமான உழைப்பு சுரண்டல் என்பதைத் தவிர வேறில்லை. வெறும், ரூ.9,000 ஐ வைத்துக் கொண்டு தங்கள் குடும்பத்தினரை ஊர்காவல் படையினர் எப்படி சமாளிப்பார்கள்? காவல்துறையில் உள்ள காவலர்கள் செய்யும் அதே வேலையைதானே ஊர் காவல் படையினரும் செய்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு


மிகவும் குறைந்த சம்பளத்தை பெற்றுக்கொண்டு இவர்களால் எப்படி உயிர் பிழைக்கு இயலும். ஊர்காவல் படையினருக்கு மாதம் ரு.9,000 ஊதியம் வழங்குவதை மறுபரிசீலனை செய்திடுமாறு ஒடிசா மாநில அரசுக்கு உத்தரவிடுகிறோம்." என நீதிபதிகள் தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஒடிசா மாநில ஊர்காவல் படையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+