மாவோயிஸ்டுகளை விட மாரடைப்பால் அதிகம் பலியாகும் சிஆர்பிஎப் வீரர்கள்
டெல்லி: சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள அடர்ந்த காடுகளில் மாவோயிஸ்டுகளை எதிர்த்து போராடி வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அதிகம் இறப்பதற்கு காரணம் கொசுக்கள் என்று தெரிய வந்துள்ளது.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள அடர்ந்த காடுகளில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டுகளை எதிர்த்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் போராடி வருகின்றனர். மாவோயிஸ்டுகள் இருக்கும் 106 மாவட்டங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மாவோயிஸ்ட் தாக்குதல்களை விட பலவித நோய்களுக்கு பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அதன் விவரம் வருமாறு,

2012
2012ம் ஆண்டு 12 போலீசார் மலேரியாவாலும், 24 பேர் மாரடைப்பாலும், 39 பேர் பிற நோய்களாலும் இறந்துள்ளனர். மாவோயிஸ்ட் தாக்குதலில் 37 பேர் பலியாகியுள்ளனர்.

2013
2013ம் ஆண்டில் 2 பேர் மலேரியாவாலும், 20 பேர் மாரடைப்பாலும், 36 பேர் பிற நோய்களாலும் இறந்துள்ளனர். மாவோயிஸ்ட் தாக்குதலில் 20 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

2014
2014ம் ஆண்டு மாவோயிஸ்ட் தாக்குதல்களில் 50 மத்திய ரிசர்வ் படை போலீசார் பலியாகியுள்ளனர். ஆனால் 95 போலீசார் பல்வேறு நோய்களுக்கு பலியாகியுள்ளனர். அதில் 27 பேர் மலேரியாவாலும், 35 பேர் மாரடைப்பாலும் இறந்துள்ளனர்.

2015
இந்த ஆண்டு மாவோயிஸ்ட் தாக்குதலில் 2 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பலியாகியுள்ளனர். அதே சமயம் ஒருவர் மலேரியாவாலும், 7 பேர் மாரடைப்பாலும், 7 பேர் பிற நோய்களாலும் இறந்துள்ளனர்.

மருந்துகள்
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு போதிய மருந்துகள் அளித்து, சுகாதார முகாம்கள் நடத்தி, உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்க வசதி இல்லாததும், வேலைப்பளுவும் தான் பல வீரர்கள் இறக்க காரணம் என்று கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications