இந்த கொசுத் தொல்லை தாங்கலை சார்: ராஜ்யசபா உறுப்பினர்கள் புகார்
டெல்லி: நாடாளுமன்றத்தில் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை என்று ராஜ்யசபா உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அதுவும் மாலை நேரத்தில் கொசுக்களின் தொல்லை அதிகம் உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நடந்த பொது பட்ஜெட் மீதான விவாதத்தில் ராஜ்யசபா உறுப்பினரும், பாலிவுட் நடிகையுமான ஜெயா பச்சன் கலந்து கொண்டார்.
விவாதத்தின் இடையே அவர் சபாநாயகரிடம் புகார் ஒன்றை தெரிவித்தார்.

ஜெயா பச்சன்
சார், ஒரு புகார் தெரிவிக்க விரும்புகிறேன். மாலை 6 மணிக்கு மேல் நாடாளுமன்ற அவைகளில் கொசுத் தொல்லையை தாங்க முடியவில்லை. அதனால் புகை போடச் சொல்லுங்கள் என்று ஜெயா பச்சன் தெரிவித்தார்.

கொசு
நல்ல ஆலோசனை. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவையின் துணை சபாநாயகர் பி.ஜே. குரியன் ஜெயா பச்சனிடம் கூறினார்.

நஜ்மா ஹெப்துல்லா
கொசு எங்களை கடிப்பதால் வலிக்கிறது சார். நாங்கள் எல்லாம் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளோம். ஆனால் கொசுக்கள் நினைத்த நேரம் வந்துவிடுகிறது. அவை உறுப்பினர்களை கொசுக்களிடம் இருந்து காப்பது உங்களின் பொறுப்பு என்று சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா காமெடியாக பேசினார்.

ரவிசங்கர் பிரசாத்
நீங்கள் தான் அவையின் பாதுகாவலர். அதனால் நீங்கள் தான் எங்களை கொசுக்களிடம் இருந்தும் பாதுகாக்க வேண்டும் என தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications