மத்திய பிரதேசத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி: 13 பேர் படுகாயம்
ரத்லம்: மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் தனியார் பேருந்தொன்று குவாரி பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் பலியாகினர். 13 பேர் படுகாயமடைந்தனர்.
மத்திய பிரதேசம் ரத்லம் பகுதியில் இருந்து மன்சூர் நோக்கி இன்று காலை 10.30 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இதில் சுமார் 40 பயணிகளுடன் சென்ற அந்த பேருந்து நம்லி நகரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் நிரம்பிய குவாரி பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப்படையினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் மக்களின் உதவியுடன் பொக்லைன் கொண்டு பள்ளத்திற்குள் விழுந்த பேருந்தை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications