நல்ல நோட்டுதானாம் நம்புங்க.. மகாத்மா காந்தி படமே இல்லாமல் அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டு!
போபால்: மகாத்மா காந்தி போட்டோவே இல்லாமல் புதிய கரன்சி நோட்டை அச்சடித்து அவசரம் காட்டியுள்ளது ரிசர்வ் வங்கி. மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் கையில் இந்த நோட்டு கிடைத்து அவர்கள் படாதபாடுபட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்திலுள்ளது பிச்சுகாவ்டி என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணா மீனா என்பவர் எஸ்.பி.ஐ வங்கியிலிருந்து 2000 ரூபாய் தாள்களை வாங்கியுள்ளார்.
சந்தைக்கு போய் பொருட்களை வாங்கும்போதுதான், அந்த நோட்டுக்களில் மகாத்மா காந்தி படம் மிஸ் ஆகியிருந்தது தெரியவந்தது. அதே மார்க்கெட்டில் இன்னொரு விவசாயியும் இப்படி ஒரு நோட்டை வைத்திருந்தாராம். இருவருமாக சேர்ந்து எஸ்.பி.ஐ வங்கியை நோக்கி விரைந்தனர்.
|
வாக்குவாதம்
"இப்படி கள்ள நோட்டை எங்கள் தலையில் கட்டிவிட்டீர்களே. போலீஸ் எங்களையல்லவா பிடிக்கும்" என கூறி வங்கி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.

பிரிண்டிங்
ஆனால், 'ச்சச்சே.. இதெல்லாம் கள்ள நோட்டு இல்லை. பிரிண்டிங் மிஸ்டேக்" என கூலாக கூறிய அதிகாரிகள் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு, விவசாயிகளுக்கு வேறு பணத்தை கொடுத்தனுப்பியுள்ளனர்.

உண்மைதான்
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.ஐ மேலாளர் ஆகாஷ் ஸ்ரீவத்சவ் கூறுகையில், காந்தி போட்டோ இல்லாமல் வந்தவை கள்ள நோட்டுக்கள் கிடையாது, அவை அவசர பிரிண்டிங்கால் ஏற்பட்ட தவறாக இருக்கலாம் என்றுள்ளார்.

அவசர பிரிண்டிங்
பணத்துக்கான தேவை அதிகரிப்பதால், மகாத்மா காந்தி போட்டோ உள்ளதா என்பதை கூட பார்க்காமல் அதி வேகத்தில், வெந்ததும், வேகாததுமாக பணம் பிரிண்ட் செய்யப்பட்டு வருவது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. ஏனெனில் இம்மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்கள் இதேபோன்ற நோட்டுக்களை வங்கிகள் வாயிலாக பெற்று பிறகு திருப்பி கொடுத்துள்ளார்களாம ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications