மத்திய பிரதேசத்தில் விஸ்வரூபம்... ஆக்சிஜன் இல்லை என பேனர் கட்டி தொங்கவிட்ட மருத்துவமனைகள்!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை என மருத்துவமனைகள் பேனர்களை கட்டி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் கொள்ளையடிக்கப்படுவதாக மாநிலங்களிடையே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

MP hospitals put up banners of Oxygen unavailability

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அரவிந்த் மருத்துவமனை, ஆக்சிஜன் இல்லை என பேனர் வைத்துள்ளது. இதேபோல் பல தனியார் மருத்துவமனைகளும் போதுமான ஆக்சிஜன் இல்லை என அறிவித்திருப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளது.

இது தொடர்பாக ஹிதேஷ் சர்மா என்ற மருத்துவர் கூறுகையில், எங்கள் மருத்துவமனையில் 32 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மாநில அரசு உடனடியாக ஆக்சிஜன்களை விநியோகிக்க வேண்டும் என்றார்.

MP hospitals put up banners of Oxygen unavailability

இதனிடையே மத்திய பிரதேசத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட நோயாளியின் உறவினர் ஒருவரை 2 அறைவிடுவேன் என மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் எச்சரிப்பதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக பிரகலாத் படேல் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

அதில், முழு வீடியோவையும் வெளியிடாமல் வெட்டி ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது. நோயாளியின் ஒருவர் அவதூறாக பேசியதால்தான் 2 அறை விடுவேன் என எச்சரிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் முழு வீடியோவையும் அமைச்சர் பிரகலாத் படேல் தரப்பு வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+