லிவிங் டுகெதர் பார்ட்னரை கொன்ற 56 வயது நபர்.. துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த கொடூரம்
மும்பை: மும்பையில் திருமணமாகாமல் ஒரே வீட்டில் வசித்து வந்த காதலியை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மீரா சாலையை சேர்ந்தவர் மனோஜ் சஹானி (56). இவருடன் சரஸ்வதி வைத்யா (36) எனும் பெண் திருமணமாகாமல் ஒரே வீட்டில் தங்கியுள்ளார். மனோஜ் போலிவாலியில் ஒரு கடையை நடத்தி வருகிறார்.

இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரு மூன்று தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஒரு தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறில் ஆத்திரமடைந்த மனோஜ், சரஸ்வதியை கொன்றுவிட்டார். இதையடுத்து அந்த பெண்ணின் உடலை மரம் அறுக்கும் இயந்திரத்தால் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பிறகு அந்த துண்டுகளை குக்கரில் போட்டு வேக வைத்துள்ளார். எனினும் அவரது வீட்டில் இருந்து சுற்றியிருந்தவர்களுக்கு அழுகிய நாற்றம் வந்தது.
மேலும் அந்த வீட்டில் இருந்து மனோஜ் மட்டுமே வெளியே சென்று வருவதையும் சரஸ்வதி வெளியே வராததையும் குடியிருப்புவாசிகள் கவனித்துள்ளனர். இதையடுத்து நாளுக்கு நாள் அழுகிய நாற்றம் அதிகரித்து வந்ததை அடுத்து அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.
அப்போது கதவை திறந்ததும் நாற்றம் அடித்தது. அங்கு ஏதோ கொலை நடந்து அதன் தடயங்களை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மனோஜை கைது செய்துள்ளனர். அது போல் அவருடன் மற்றொரு நபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு மே மாதம் தலைநகர் டெல்லியில் இது போன்றதொரு கோர சம்பவம் நடந்தது. அர்னாப் புனாவாலா என்பவர் தன்னுடன் லிவிங் டுகெதராக வசித்து வந்த ஷ்ரத்தா வாக்கர் என்பவரை திருமணம் செய்து கொள்ள நச்சரித்ததால் ஆத்திரத்தில் கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்தார்.
எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷ்ரத்தா வாக்கரை காணவில்லை என்பதால் அவருடைய தோழிகள் போலீஸில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அர்னாப் கைது செய்யப்பட்டார். கடந்த 24 ஆம் தேதி 6,629 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications