58 அடி உயர நீரவ் மோடி கொடும்பாவியை எரித்து மும்பையில் ஹோலி கொண்டாட்டம்
மும்பையில் நீரவ் மோடியின் கொடும்பாவியை எரித்து மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
Recommended Video

மும்பை: நீரவ் மோடியின் கொடும்பாவியை எரித்து மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் கடன் பெற்றார். ஆனால் அதனை திருப்பி செலுத்தாமல் நீரிவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

விவசாயிகள் தற்கொலை
பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய நீரவ் மோடி வெளிநாட்டில் சொகுசாக வாழ, 50 ஆயிரம் ரூபாய் கடன் பெறும் விவசாயிகள் எல்லாம் வங்கிகளின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

மக்கள் கோபம்
நீரவ் மோடி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததோடு வெளிநாட்டில் குடும்பத்துடன் தலைமறைவாகி வாழ்ந்து வருகிறார். இதனால் மக்கள் அவர் மீது கோபம் கொண்டுள்ளனர்.

கொடும்பாவி எரிப்பு
இந்நிலையில் ஹோலிகா அரக்கியை எரித்துக்கொன்றதை நினைவு கூறும் வகையில் ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் தீயவைகளை எரிப்பது வழக்கம். அதன்படி நாட்டிற்கு பேரிழப்பை ஏற்படுத்திய நீரவ் மோடியின் கொடும்பாவியை எரித்து மும்பை மக்கள் ஹோலியை கொண்டாடினர்.

58 அடி உயர கொடும்பாவி
இதற்காக 58 அடி உயரத்தில் நீரவ் மோடியின் கொடும்பாவி தயாரிக்கப்பட்டு மும்பை வெர்லி பகுதியில் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டது. அரக்கி ஹோலிகாவுடன் நீரவ் மோடியை ஒப்பிட்டு மும்பை மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications