007 ஆகும் இல்லத்தரசிகள்... வீட்டில் இருந்தபடியே ‘போட்டுக்’ கொடுப்பார்கள்!
மும்பை: பலாத்கார குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுக்கும் ரகசிய ஏஜண்டுகளாக குடும்பத் தலைவிகளை மாற்றும் புதிய திட்டம் ஒன்றை மும்பை போலீசார் தொடங்கியுள்ளனர்.
மும்பை அண்டாப் ஹில் மற்றும் வடாலா பகுதியில் கடந்தாண்டு சுமார் 71 பாலியல் பலாத்கார புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான குற்றங்கள் மைனர் குற்றவாளிகள் செய்தது. எனவே, இவற்றைக் குறைக்க அப்பகுதி போலீசார் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.

அதன்படி, குடும்பத் தலைவிகளை பலாத்கார குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுக்கும் ரகசிய ஏஜெண்டாக மாற்ற அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் முதல்கட்டமாக ஐந்து குடும்பத் தலைவிகளை அவர்கள் தேர்ந்தெடுத்து, இதற்கான பயிற்சி அளித்துள்ளனர். தேர்ந்தெடுக்கப் பட்ட இந்த 5 பேரும் அண்டாப் ஹில் மற்றும் வடாலா பகுதியில் வசித்து வருபவர்கள் ஆவார்கள்.
இவர்களுக்கு பெண் பித்தர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிவது தொடர்பான பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி இணை கமிஷ்னர் தேவன் பாரதி கூறுகையில், ‘ஆம் இது முன்னோட்டம் தான். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் படும் பெண்கள் மும்பை போலீசின் கண் மற்றும் காதாக செயல்பட்டு பல ரகசிய தகவல்களைச் சேகரித்துக் கொடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மும்பை அண்டாப் ஹில் மற்றும் வடாலா பகுதியில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், முதல்கட்டமாக அங்கு இந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டு, பயிற்சி பெற்று போலீசின் ரகசிய ஏஜெண்டாக செயல்பட உள்ள பெண்களின் விபரங்கள் போலீசில் ரகசியமாக வைக்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது தவிர பலாத்கார தடுப்பு தொடர்பான பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications