007 ஆகும் இல்லத்தரசிகள்... வீட்டில் இருந்தபடியே ‘போட்டுக்’ கொடுப்பார்கள்!
மும்பை: பலாத்கார குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுக்கும் ரகசிய ஏஜண்டுகளாக குடும்பத் தலைவிகளை மாற்றும் புதிய திட்டம் ஒன்றை மும்பை போலீசார் தொடங்கியுள்ளனர்.
மும்பை அண்டாப் ஹில் மற்றும் வடாலா பகுதியில் கடந்தாண்டு சுமார் 71 பாலியல் பலாத்கார புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான குற்றங்கள் மைனர் குற்றவாளிகள் செய்தது. எனவே, இவற்றைக் குறைக்க அப்பகுதி போலீசார் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.

அதன்படி, குடும்பத் தலைவிகளை பலாத்கார குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுக்கும் ரகசிய ஏஜெண்டாக மாற்ற அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் முதல்கட்டமாக ஐந்து குடும்பத் தலைவிகளை அவர்கள் தேர்ந்தெடுத்து, இதற்கான பயிற்சி அளித்துள்ளனர். தேர்ந்தெடுக்கப் பட்ட இந்த 5 பேரும் அண்டாப் ஹில் மற்றும் வடாலா பகுதியில் வசித்து வருபவர்கள் ஆவார்கள்.
இவர்களுக்கு பெண் பித்தர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிவது தொடர்பான பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி இணை கமிஷ்னர் தேவன் பாரதி கூறுகையில், ‘ஆம் இது முன்னோட்டம் தான். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் படும் பெண்கள் மும்பை போலீசின் கண் மற்றும் காதாக செயல்பட்டு பல ரகசிய தகவல்களைச் சேகரித்துக் கொடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மும்பை அண்டாப் ஹில் மற்றும் வடாலா பகுதியில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், முதல்கட்டமாக அங்கு இந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டு, பயிற்சி பெற்று போலீசின் ரகசிய ஏஜெண்டாக செயல்பட உள்ள பெண்களின் விபரங்கள் போலீசில் ரகசியமாக வைக்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது தவிர பலாத்கார தடுப்பு தொடர்பான பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications