ஆந்திராவை உலுக்கிய கொலை.. மகனை கொன்று 5 துண்டுகளாக வெட்டி.. ஏரியில் வீசிய கொடூர தாய்.. நடந்தது என்ன?
அமராவதி: ஆந்திர மாநிலம் அருகே பெற்ற மகனை தாயே வெட்டிக் கொன்று உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவான தாயை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாட்டில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், போதைப் பொருள்கள் புழக்கம், மதுப்பழக்கம், கொலை, கொள்ளை போன்ற பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

குறிப்பாக இளைஞர்கள் பலர் போதைப் பொருள், மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்பட்டு வந்தாலும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், ஆந்திர மாநிலம் அருகே தனது மகனின் ஒழுங்கீன செயல்பாடுகளைத் தாங்க முடியாமல் பெற்ற மகனை தாயே வெட்டிக் கொன்று உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவான தாயை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கம்பம் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி தேவி. 57 வயதான லட்சுமிக்கு ஷியாம் பிரசாத் என்ற 35 வயது நிரம்பிய மகன் ஒருவர் உள்ளார். ஷியாம் பிரசாந்த் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், ஷியாம் மிகவும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவருடைய தாய் மிகவும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார்.
ஹைதராபாத், நரசரபேட்டை, பெங்களூரு பகுதியில் உள்ள தன்னுடைய சித்தி, பெரியம்மா, அத்தை என பல்வேறு உறவினர்களிடம் ஷியாம் பிரசாந்த் மிகவும் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் லட்சுமிதேவி, தன்னுடைய உறவினர்களுடன் சேர்ந்து ஷியாமை கொலை செய்யத் திட்டம் போட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, லட்சுமி தேவி தனது மகனை நேற்று முன்தினம் இரவு கோடாரியால் வெட்டி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். பின்னர், தனது உறவினர்களுடன் சேர்ந்து ஷியாமின் உடலை ஐந்து துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டை கொண்டு கட்டியுள்ளார். பின்னர், அந்த உடலின் பாகங்களை கிராமத்தின் அருகில் உள்ள ஏரியில் வீசியுள்ளார்.
பெற்ற மகனைக் கொன்றுவிட்டு லட்சுமி தேவி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷியாமின் உடல் ஏரியில் இருந்து கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவான லட்சுமி தேவியை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications