Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை பற்ற வைத்த தீ.. நாகாலாந்தில் பற்றி எரியுதே.. ’நாய் கறி’ பேச்சு இப்படி வெடிச்சுருக்கே!

Subscribe to Oneindia Tamil

கோஹிமா: நாகாலாந்து மக்களின் நாய்கறி உணவு பழக்கத்தை விமர்சித்ததாக மூத்த திமுக தலைவர் ஆர்.எஸ். பாரதிக்கு நாகாலாந்து சுற்றுலாத்துறை அமைச்சர் தெம்ஜென் இம்னா அலாங் (Temjen Imna Along) கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னர் நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்தார். அப்போது நாகாலாந்து ஆயுத குழுக்களுடனான பேச்சுவார்த்தை விவகாரத்தில் கடும் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டது. பின்னர் நாகாலாந்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆளுநராக ஆர்.என்.ரவி மாற்றப்பட்டார். அப்போது நாகாலாந்து மக்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

 Nagaland Minister Temjen Imna Along condemns DMK RS Bharathi on Dog Meaters remark

நாகாலாந்து போல.. : இதனை சுட்டிக்காட்டும் வகையில், நாய்கறி சாப்பிடும் நாகாலாந்துகாரர்களுக்கு சொரணை வந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை ஓட ஓட விரட்டி அடித்தனர். சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் தமிழனகுக்கு எந்த அளவுக்கு சொரணை இருக்கும் என விமர்சித்திருந்தார் மூத்த திமுக தலைவர் ஆர்.எஸ். பாரதி.

ஆளுநர் ரவி, அண்ணாமலை: இதற்கு உடனடியாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனம் தெரிவித்தார். நாய்கறி சாப்பிடும் நாகா இன மக்களை ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்திவிட்டதாக கொந்தளித்திருந்தார் ஆர்.என்.ரவி. இதேபோல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் ஆர்.எஸ்.பாரதி பேசிய பேச்சை தமது எக்ஸ் பக்கத்தில் இந்தி சப் டைட்டிலுடன் பதிவிட்டிருந்தார்.

ஆர்.எஸ்.பாரதி விளக்கம்: ஆனால் "நாகாலாந்து மக்களை நான் இழிவுபடுத்தியதாக ஆளுநர் மாளிகை கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை குவஹாத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது எனவும் ஆர்.எஸ். பாரதி விளக்கம் தந்திருந்தார்.

நாகாலாந்து அமைச்சர் கண்டனம்: இதனிடையே அண்ணாமலையின் எக்ஸ் பதிவில் பதிலளித்துள்ள நாகாலாந்து சுற்றுலா, கல்வித்துறை அமைச்சர் தெம்ஜென் இம்னா அலாங் கூறியிருப்பதாவது: உங்களால் இந்தியில் படிக்க முடியாது என்பதற்காக இந்தியில் எழுதியிருப்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருகிறேன். பெயரில் பாரத் என வைத்து கொண்டு இந்த பாரதமே பெருமைப்படும் ஒரு சமூகத்தை அவமதித்துள்ளீர்கள். எங்களுடைய உணர்வுகளை காயப்படுத்தக் கூடாது. ஒட்டுமொத்த வடகிழக்கு மாநில மக்களும் ஒருங்கிணைந்து நமது பண்பாடு, வாழ்வுரிமை குறித்து அவர்களுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும். இவ்வாறு நாகாலாந்து அமைச்சர் தெம்ஜென் இம்னா அலாங் பதிவிட்டுள்ளார். இதேபோல நாகலாந்து மற்றும் வடகிழக்கு மாநில ஊடகங்களும் ஆர்.எஸ்.பாரதி பேச்சு,விளக்கம் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டும் வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+