அண்ணாமலை பற்ற வைத்த தீ.. நாகாலாந்தில் பற்றி எரியுதே.. ’நாய் கறி’ பேச்சு இப்படி வெடிச்சுருக்கே!
கோஹிமா: நாகாலாந்து மக்களின் நாய்கறி உணவு பழக்கத்தை விமர்சித்ததாக மூத்த திமுக தலைவர் ஆர்.எஸ். பாரதிக்கு நாகாலாந்து சுற்றுலாத்துறை அமைச்சர் தெம்ஜென் இம்னா அலாங் (Temjen Imna Along) கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னர் நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்தார். அப்போது நாகாலாந்து ஆயுத குழுக்களுடனான பேச்சுவார்த்தை விவகாரத்தில் கடும் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டது. பின்னர் நாகாலாந்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆளுநராக ஆர்.என்.ரவி மாற்றப்பட்டார். அப்போது நாகாலாந்து மக்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நாகாலாந்து போல.. : இதனை சுட்டிக்காட்டும் வகையில், நாய்கறி சாப்பிடும் நாகாலாந்துகாரர்களுக்கு சொரணை வந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை ஓட ஓட விரட்டி அடித்தனர். சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் தமிழனகுக்கு எந்த அளவுக்கு சொரணை இருக்கும் என விமர்சித்திருந்தார் மூத்த திமுக தலைவர் ஆர்.எஸ். பாரதி.
ஆளுநர் ரவி, அண்ணாமலை: இதற்கு உடனடியாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனம் தெரிவித்தார். நாய்கறி சாப்பிடும் நாகா இன மக்களை ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்திவிட்டதாக கொந்தளித்திருந்தார் ஆர்.என்.ரவி. இதேபோல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் ஆர்.எஸ்.பாரதி பேசிய பேச்சை தமது எக்ஸ் பக்கத்தில் இந்தி சப் டைட்டிலுடன் பதிவிட்டிருந்தார்.
माननीय Thiru RS Bharathi जी,
— Temjen Imna Along (@AlongImna) November 6, 2023
ये बड़े दुःख की बात है की आपके नाम में ही 'Bharat' होने के बावजूद आपने एक समुदाय का अपमान और ठेंस पहुंचाने की कोशिश की जिस पर पूरे भारत 🇮🇳 को गर्व है।
INDI Alliance वालों, जरा अपने शब्दों पर काबू रखो।।
आओ कभी North-East पे to know us and our… https://t.co/uYr3JMs5Ll pic.twitter.com/vkY3ppbNaG
ஆர்.எஸ்.பாரதி விளக்கம்: ஆனால் "நாகாலாந்து மக்களை நான் இழிவுபடுத்தியதாக ஆளுநர் மாளிகை கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை குவஹாத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது எனவும் ஆர்.எஸ். பாரதி விளக்கம் தந்திருந்தார்.
நாகாலாந்து அமைச்சர் கண்டனம்: இதனிடையே அண்ணாமலையின் எக்ஸ் பதிவில் பதிலளித்துள்ள நாகாலாந்து சுற்றுலா, கல்வித்துறை அமைச்சர் தெம்ஜென் இம்னா அலாங் கூறியிருப்பதாவது: உங்களால் இந்தியில் படிக்க முடியாது என்பதற்காக இந்தியில் எழுதியிருப்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருகிறேன். பெயரில் பாரத் என வைத்து கொண்டு இந்த பாரதமே பெருமைப்படும் ஒரு சமூகத்தை அவமதித்துள்ளீர்கள். எங்களுடைய உணர்வுகளை காயப்படுத்தக் கூடாது. ஒட்டுமொத்த வடகிழக்கு மாநில மக்களும் ஒருங்கிணைந்து நமது பண்பாடு, வாழ்வுரிமை குறித்து அவர்களுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும். இவ்வாறு நாகாலாந்து அமைச்சர் தெம்ஜென் இம்னா அலாங் பதிவிட்டுள்ளார். இதேபோல நாகலாந்து மற்றும் வடகிழக்கு மாநில ஊடகங்களும் ஆர்.எஸ்.பாரதி பேச்சு,விளக்கம் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டும் வருகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications