எல்லாப் புகழும் மோடிக்கே.. சொல்கிறார் வசுந்தரா ராஜே
ஜெய்ப்பூர்: நரேந்திர மோடி காரணமாகத்தான் ராஜஸ்தானில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்று அங்கு மீண்டும் முதல்வராகப் போகும் பாஜகவின் வசுந்தரா ராஜே சிந்தியா கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸை ஆட்சிக்கட்டிலிலிருந்து துரத்தியுள்ளது பாஜக. அங்கு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்து வசுந்தார மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் மோடியே இந்த பெரும் வெற்றிக்குக் காரணம் என்றும் அவர் வர்ணித்துள்ளார். இதுகுறித்து வசுந்தரா கூறுகையில், மோடிதான் இந்த மிகப் பெரிய வெற்றிக்கு முக்கியக் காரணம். அவர் குஜராத்தில் செய்ததைப் பார்த்து இங்கும் அதுபோல நடக்க வேண்டும் என்று விரும்பி பாஜகவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
இது அரை இறுதிதான். இறுதிப் போட்டியில் என்ன நடைபெறப் போகிறது என்பதை மக்கள் இதிலேயே காட்டி விட்டார்கள் என்றார் அவர்.
அசோக் கெலாட் கருத்து
தேர்தல் தோல்வி குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், பாஜகவினரின் எதிர்மறைப் பிரசாரம்தான் எங்களது தோல்விக்குக் காரணம். வேறு எந்தக் காரணத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. வளர்ச்சியை முன்வைத்து நாங்கள் பிரசாரம் செய்தோம். ஆனால் தோல்வியைடந்து விட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications