மோடியை பற்றி வாய் தவறி 'அப்படி' கூறிவிட்டேன்: கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி
பெங்களூர்: நரேந்திர மோடி ஆளும் நாட்டில் தான் இருக்க மாட்டேன் என்று வாய் தவறி கூறிவிட்டதாக கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி ஆட்சி செய்தால் நான் இந்தியாவில் வாழ மாட்டேன் என்று பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி(82) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு மோடியின் ஆதரவாளர்கள் பாகிஸ்தானுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தது, நாட்டை விட்டு வெளியேறுமாறு ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மிரட்டியதால் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து அனந்தமூர்த்தி கூறுகையில்,

வாய் தவறி
மோடி ஆட்சி செய்தால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று வாய் தவறி கூறிவிட்டேன். மோடியின் ஆட்சியில் வாழ விரும்பவில்லை என்று தான் கூற விரும்பினேன். இதை பொதுஅறிவு உள்ள யாராலும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் படிப்பறிவில்லாதவர்கள். அவர்களுக்கு நான் தற்போது நாட்டை விட்டு வெளியேற வேண்டுமாம்.

டிக்கெட்
எனக்கு யாரும் பாகிஸ்தானுக்கு டிக்கெட் எடுத்து கொடுக்கவில்லை. அந்த செய்தி எப்படி வெளியானது என்று தெரியவில்லை. என்னை நாட்டை விட்டு வெளியேறுமாறு மட்டும் கூறினார்கள். தாங்கள் ஆர்எஸ்எஸ் ஆட்கள் என்று கூறி எனக்கு இமெயில் அனுப்பினார்கள்.

போலீஸ் பாதுகாப்பு
என் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. என்னை யாரும் நேரில் மிரட்டவில்லை போனில் தான் மிரட்டினார்கள். நான் கர்நாடகாவை விட்டு கூட வெளியேற மாட்டேன். இது என் இடம்.

இந்திரா காந்தி
நான் முன்பு இந்திரா காந்தி பற்றி கூட விமர்சித்துள்ளேன். ஆனால் அப்போது யாரும் என்னை மிரட்டவோ, தண்டிக்கவோ இல்லை. தற்போதும் கூட மோடி என்னை தண்டிக்கவில்லை. அவரது ரசிகர்கள் தான் மிரட்டுகிறார்கள்.

மோடி
என் விவகாரம் பற்றி மோடிக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலும் இருக்கலாம். அவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவர் தானே. அவரும் இளம் வயதில் இது போன்று செய்திருக்கலாம்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications