மோடி ஆட்சியில் மத சுதந்திரம் இல்லை: அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுக்கும் மத்திய அரசு
டெல்லி: மோடி ஆட்சியில் இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளதை மத்திய அரசு மறுத்துள்ளது.
அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் தனது ஆண்டறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் சிறுபான்மையினர் மீது நடக்கும் தாக்குதல்கள், கர்வாப்சி என்ற பெயரில் நடக்கும் கட்டாய மதமாற்றம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து சிறுபான்மையினரை தாக்கிப் பேசி வருகிறார்கள். மேலும் சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்கள் நடந்துள்ளதுடன் கட்டாய மதமாற்றமும் நடத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சியில் இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில்,
அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்தியாவை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் அறிக்கையை தயாரித்துள்ளனர் என்றார்.
இந்தியாவில் மத சுதந்திரம் பாதிக்கப்படமால் பார்த்துக் கொள்வேன் என்று கூறிய பிரதமர் மோடி பற்றி அந்த அறிக்கையில் பாராட்டி பேசப்பட்டுள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications