குஜராத் கலவரத்திற்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை: நடிகர் சல்மான் கான்
Subscribe to Oneindia Tamil
மும்பை: குஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடி மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
நடிகர் சல்மான் கான் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த பட்டம் விடும் விழாவில் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து பட்டம் விட்டு மகிழ்ந்தார். சல்மான் வந்ததால் விழா வண்ணமயமாக ஆகிவிட்டதாக மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு சல்மான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
குஜராத் கலவர வழக்கில் மோடி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை நீதிமன்றமே விடுவித்துவிட்டது. அதனால் அவர் இது குறித்து மன்னிப்பு கேட்க தேவையில்லை. மோடியை பிரதமர் பதவிக்கு ஆதரித்து பேசும் நிலையில் நான் இல்லை. குஜராத் முதல்வருடன் சேர்ந்து பட்டம் விட்டது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.













Click it and Unblock the Notifications