தீப்பிடிக்காது, குண்டு துளைக்காது: ஸ்கார்பியோவிலிருந்து பிஎம்டபிள்யூவுக்கு மாறுகிறார் மோடி
டெல்லி: தீவிரவாத தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சிறப்பு அம்சங்கள் கொண்ட பிஎம்டபிள்யூ கார்களை இனிமேல் பிரதமர் நரேந்திரமோடி பயன்படுத்த உள்ளார். தனது பேவரைட் காரான ஸ்கார்பியோவுக்கு குட்பை சொல்லிவிட்டார்.விருச்சிக ராசிக்காரரான நரேந்திரமோடி, ராசியின் பெயர் கொண்ட ஸ்கார்பியோவை இதுவரை பயன்படுத்தி வந்தார். இதுதான் மோடியின் விருப்பமான காராக இருந்துவந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது முற்றிலுமாக ஸ்கார்பியோவை மட்டுமே பயன்படுத்தினார்.

பாதுகாப்பு படை அறிவுறுத்தல்
பிரதமராக மோடி பதவியேற்றதும், பாதுகாப்பு காரணங்களுக்காக நவீன வசதி கொண்ட பிஎம்டபிள்யூ-7 வகை காரை பயன்படுத்த சிறப்பு பாதுகாப்பு படை பரிந்துரை செய்தது. அதையேற்று பிஎம்டபிள்யூ-7 வகை காரை மோடி பயன்படுத்த உள்ளார்.

மோடிக்கு, மகிந்திரா கோரிக்கை
இதனிடையே மோடி தனது செல்லமான ஸ்கார்பியோ கார்களையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று மகிந்திரா நிறுவனத்தின் சார்பில் அவருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள்விடுக்கப்பட்டது. பிரதமரே பயன்படுத்தும் கார் என்பதால் ஸ்கார்பியோவின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று இந்திய நிறுவனமான மகிந்திரா நினைத்தது. மோடியின் விருப்பமும் ஸ்கார்பியோவாகவே இருந்தது.

பிஎம்டபிள்யூவேதான் வேணுமா?
ஆனால் சிறப்பு பாதுகாப்பு படையினர் இக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். இசெட் பிளஸ் பாதுகாப்பு வளையத்திலுள்ள மோடிக்கு சிறப்பு அம்சங்கள் கொண்ட கார் தேவை என்று பாதுகாப்பு படை தெரிவித்துவிட்டது. எனவே நவீன வகை பிஎம்டபிள்யூ-7 வகை கார்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காற்றுகூட புகாது
இந்த கார் அதிநவீன துப்பாக்கிகளில் இருந்துவரும் குண்டுகளையும் துளைக்க விடாது. வெப்பத்தை உணரும் சென்சார், வெடிகுண்டுகள், ஏவுகணைகளை கண்டறியும் சென்சார் ஆகியவை இந்த காரில் உள்ளன. காரை தீவைத்து கொழுத்தினாலும்கூட, அதன் எரிபொருள் டேங் வெடிக்காது, தீப்பிடிக்காது. விஷ வாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினாலும்கூட, கேஸ் புரூப் தொழில்நுட்பம் இருப்பதால் காருக்குள் இருப்போருக்கு பாதிப்பு ஏற்படாது.

9 கார் கான்வாய்
இந்திய பிரதமர்களில் தீவிரவாத அச்சுறுத்தல் மிகவும் அதிகமாக உள்ளவர் நரேந்திரமோடி. அதேபோல மிகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளார். எனவே பாதுகாப்பு படை வீரர்களுக்கு வேலை பழு அதிகம். மோடி தனது காரில் பயணிக்கும்போது வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் கருவி பொருத்திய வாகனம் உட்பட 9 கார்கள் உடன் செல்லும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications